‘120 பேர் பலி!’.. தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு முழு விபரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் இன்று (ஆகஸ்டு 17, 2020) மேலும் 5,890 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,43,945ஆக அதிகரித்துள்ளது.

சென்னையைப் பொருத்தவரை இன்று ஒரே நாளில் 1,185 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,17,839 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 120 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம். தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோரி எண்ணிக்கை 5, 886 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,667 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்ததை அடுத்து, மொத்தமாக இதுவரை 2,83,937 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்