“85 பேர் பலி!”.. மொத்த பலி எவ்வளவு? சென்னையின் நிலவரம் ‘இதுதான்!’.. தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு.. முழு விபரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் மேலும் 6 ஆயிரத்து 986 பேருக்கு இன்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது

இதனால் பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 06 ஆயிரத்து 737 லிருந்து 2 லட்சத்து 13 ஆயிரத்து 723 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பைப் பொருத்தவரை இன்றைய தினம் 85 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தமாக கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,494 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைப் பொருத்தவரை பிற மாவட்டங்களில் 5,831 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதேபோல் சென்னையில் மட்டும் இன்றைய தினம் 1,155 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில், சென்னையில் கொரோனாவின் பாதிப்பு எண்ணிக்கை 93,537 லிருந்து 94,695 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2,011 ஆக உயர்ந்துள்ளது.

இன்று மட்டும் மொத்தமாக 5 ஆயிரத்து 471 பேர் குணமடைந்துள்ளதை அடுத்து, மொத்தமாக தமிழகத்தில் இதுவரை 1,56,526 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்