‘பாதிப்பை விட அதிகமான குணமானோர் எண்ணிக்கை!’.. ‘மொத்தமாக சிகிச்சையில் இருப்பவர்கள் எத்தனை பேர்?’.. இன்றைய கொரோனா நிலவரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,795 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 1,186 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

இதுவரை மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,55,449 ஆக உயர்ந்துள்ள நிலையில், சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,20,267 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே  தமிழகத்தில் இன்று மேலும் 6,384 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ள நிலையில், மொத்தமாக இதுவரை கொரோனாவில் இருந்து 2,96,171 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் 53, 155 பேர் தற்போது கொரோனா சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் மேலும் 116 பேர் கொரோனாவால் உயிரிழந்ததை அடுத்து, பலி எண்ணிக்கை 6,123 ஆக உயர்ந்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்