'த.மா.கா. துணைத் தலைவர் ஞானதேசிகன் காலமானார்...' - அரசியல் தலைவர்கள் இரங்கல்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரான ஞானதேசிகன் அவர்கள் உடல்நலக் குறைவால் இன்று காலமானார்

முன்னாள் மாநிலங்களவையின் உறுப்பினராக மக்களுக்கு சேவை செய்து வந்த, தமிழ் மாநில காங்கிரஸ் துணைத் தலைவரான ஞானதேசிகன் அவர்கள் உடல் நலக்குறைவால் கடந்த நவம்பர் மாதம் 11 ஆம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிர் பிரிந்தது. மேலும் இவர் 2011 முதல் 2014 ஆம் ஆண்டு வரை தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவராக பொறுப்பு வகித்தும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் திரு.ஞானதேசிகன் அவர்கள் இருமுறை மாநிலங்களவையின் உறுப்பினராக பதவி வகித்து தன் வாழ்நாளில் பெரும்பங்கை மக்களுக்காகவே செலவழித்து உள்ளார் என்பதும் நினைவு கூறத்தக்கது.

திரு.ஞானதேசிகன் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்