விபரீதம்.! பாத்ரூமில் வாட்டர் ஹீட்டரை ON செய்த இளைஞர்.. திடீரென நடந்த பரபரப்பு சம்பவம்.!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருப்பூரில் வாட்டர் ஹீட்டரை ஆன் செய்த போது மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | "அது பாம்பு இல்ல".. வீட்டில் பாம்புடன் வசித்து வரும் பெண் சொன்ன 'அதிர வைக்கும்' பதில்..!

திருப்பூர் எம்.எஸ். நகர் பகுதியை சேர்ந்தவர் வினோத் (வயது 29). இவர் அப்பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளன.

இந்த சூழலில் வீட்டின் குளியலறையில் உள்ள வாட்டர் ஹீட்டரை வினோத் ஆன் செய்ய முயன்றதாக சொல்லப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி அவர் தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி வினோத் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வாட்டர் ஹீட்டரை ஆன் செய்ய முயன்றபோது மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read | ‘கணவர் வெளிநாட்டில் வேலை’.. வீட்டில் தனியாக இருந்த தாய், மகளுக்கு நேர்ந்த விபரீதம்.. கன்னியாகுமரியில் பரபரப்பு..!

TIRUPUR, YOUTH, WATER HEATER, WATER HEATER ELECTROCUTION, இளைஞர், வாட்டர் ஹீட்டர், திருப்பூர்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்