VIDEO: ஜெயில்ல பெரிய உருண்டை கிடைக்கும் ரவுடி பேபி அக்கா.. சூர்யாவிற்கு டிக்டாக் திவ்யா ஆறுதல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

டிக்டாக்கில் பிரபலமான ரவுடி பேபி சூர்யா சமீபத்தில் கைது செய்யப்பட்டார். அதுமட்டுமல்லாமல் அவருடைய ஆன் நண்பரும் கைது செய்யப்பட்டார்.

Advertising
>
Advertising

பிரபலமாக எதிர்மறை விளம்பரம்:

ஆன்லைனில் எதிர்மறையாக விளம்பரம் தேடும் விதமாக ஆபாசமாக பேசுவது, பிறரை திட்டுவது என நிறைய புகார் எழுந்தது. இணையதளங்களில் குழந்தைகள், மாணவர்கள் வருவதால் இந்த மாதிரியான வீடியோக்களினால் இளம் தலைமுறை கெட்டுப்போக வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறி வந்தனர்.  இந்த நிலையில் ரவுடி பேபி சூர்யா என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் கார்த்திக்கை தேடிக் கொண்டிருந்த டிக்டாக் திவ்யா இதுகுறித்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் எனக்கும் உங்களை போல் ஏழு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து ஜெயிலில் அடைத்தனர். மூன்று முறை ஜெயிலுக்கு சென்று விட்டு தற்போது எவ்வளவு ஜாலியாக சுற்றிக் கொண்டிருக்கிறேன்.

பெரிய உருளைக்கிழங்கு உருண்டை:

மேலும், சூர்யா அக்கா நீங்கள் நல்ல நாளில் ஜெயிலுக்கு போயுள்ளீர்கள். நீ அங்கையே இருந்துகொள் அக்கா. வெளியே வந்தால் நமக்கு வீடு தர மாட்டார்கள் . எனவே ஜெயிலில் இருப்பது தான் நல்லது என தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல் புதன்கிழமை தேங்காய் சோறு, ரசம் உட்பட வாரத்தில் என்ன உணவுகள் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.

வாரத்தில் ஒருநாள் பெரிய உருளைக்கிழங்கு உருண்டை ஒன்றையும் தருவார்கள் என கூறியுள்ளார். ஆனால் சென்ட்ரல் ஜெயிலில் தான் அதிகமாக உணவு கிடைக்கும் எனவும், சப் ஜெயிலில் சற்று குறைவாக தான் கிடைக்கும் எனவும் கூறியுள்ளார். ஆனால், உங்களுக்கு பதினைந்து நாளில் பெயில் கிடைத்து விடும். கண்டிப்பாக வெளியே வருவீர்கள் எனவும் கூறியுள்ளார்.

என்னை மாதிரியே கஷ்டப்பட வேண்டியது இருக்கும்:

ஆனால், வெளியே வந்தால் என்னை மாதிரி கஷ்டப்பட வேண்டியது இருக்கும். ஜெயிலில் இருப்பதே நல்லது எனவும் டிக்டாக் சூர்யாவிற்கு திவ்யா அறிவுரை கூறியுள்ளார். இந்த வீடியோ இணையதளத்தில் வெளியாகி தற்போது வைரலாக பரவி வருகிறது.

DIVYA, ROWDY BABY SURYA, TIKTOK, டிக்டாக், திவ்யா, ரவுடி பேபி சூர்யா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்