'வாய்ப்பு கிடைச்சும் விளையாட முடியலியே'... 'சோகத்தில் இருந்த ரசிகர்கள்'... ட்விட்டர் மூலம் சஸ்பென்ஸை உடைத்த நடராஜன்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ட்விட்டரில் நடராஜன் பதிவிட்டுள்ள ட்வீட் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5 டி20 போட்டி தொடர் அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் நடராஜன் இந்திய அணியில் இடம்பிடித்தார். ஆனால் காயம் காரணமாக அவரால் ஒரு போட்டியில்கூட விளையாட முடியவில்லை. இது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது.

இதனிடையே இவ்விரு அணிகளுக்கு இடையிலான 5-ஆவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. ஆனால் இன்றையப் போட்டியில் நடராஜன் பங்கேற்பாரா எனத் தெரியவில்லை. அதேநேரத்தில் நடராஜனின் காயம் பூரண குணமடைந்து அவர் வலைப்பயிற்சியும் தொடங்கிவிட்டார். வரும் மார்ச் 23-ஆம் தேதி முதல் இங்கிலாந்து அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி நடைபெற இருக்கிறது.

இதற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் நடராஜனும் சேர்க்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக ஆஸ்திரேலியா தொடருக்குப் பின்பு இந்திய அணிக்காக நடராஜன் விளையாடுவது உறுதியாகி இருக்கிறது.

இந்நிலையில் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட நடராஜன் "உங்களின் மனதுக்குப் பிடித்த வேலையைத் தேர்ந்தெடுத்தால் தினசரி அந்தப் பணித் தானாகவே உங்கள் வாழ்க்கையில் நடக்கும். இந்திய அணியினருடன் இணைந்ததில் மகிழ்ச்சி" என தன்னுடைய மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார் நடராஜன். இது ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்