‘என் மரணத்தை களங்கப்படுத்த வேண்டாம்’... ‘திருமணம்’ நிச்சயிக்கப்பட்ட ‘இளம்பெண்ணின்’ கடிதத்தைப் பார்த்து... ‘உறைந்துபோன’ குடும்பத்தினர்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருவாரூர் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் குளத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் அருகே உள்ள காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். அவருடைய மகள் பிரதீபா (22). பிரதீபாவிற்கு வரும் ஜனவரி 30ஆம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், திருமண ஏற்பாடுகள் தொடர்பாக ரவிச்சந்திரன் வெளியூர் சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று அவர் வீடு திரும்பியபோது பிரதீபா காணாமல் போயிருந்துள்ளார். மேலும் அவர் எழுதிய கடிதம் ஒன்றும் வீட்டில் கிடைத்துள்ளது.

அந்தக் கடிதத்தில் அவர், “எனக்கு உடல்நிலை சரியில்லாததாலேயே தற்கொலை செய்துகொள்கிறேன். உடல்நிலை சரியில்லாததால் திருமணம் முடிந்து சென்ற பிறகு என்னால் சரியாக நடந்துகொள்ள முடியுமா எனத் தெரியவில்லை. காதல் பிரச்சனை எதுவும் எனக்கு இல்லை. என்னுடைய மரணத்தை களங்கப்படுத்த வேண்டாம்” எனக் கூறியுள்ளார்.

அந்தக் கடிதத்தைப் படித்ததும் உறைந்துபோன ரவிச்சந்திரன் உடனடியாக மகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அதே பகுதியில் உள்ள பிடாரிக்குளத்தில் குதித்து பிரதீபா தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அவருடைய உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மன அழுத்தம், மன உளைச்சல் உள்ளவர்கள் Sneha Suicide Prevention helpline – 044 -2464000 (24 hours), State suicide prevention helpline – 104 (24 hours), iCall Pychosocial helpline – 022-25521111 ( Mon – Sat, 8am – 10pm) போன்ற இலவச ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசினால் அதிலிருந்து வெளிவர ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.

THIRUVARUR, MARRIAGE, WOMAN, SUICIDE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்