"எனக்கு முன்னாடியே தம்பிக்கு கல்யாணமா??.." தகராறு பண்ணிய அண்ணன்.. கல்யாணம் முடிச்சிட்டு திரும்பி வந்து பாத்தப்போ.. ஆடிப் போன உறவினர்கள்

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தேனி மாவட்டம், சின்னமனூர் பகுதியை அடுத்த காந்திநகர் காலனியைச் சேர்ந்தவர் அய்யாசாமி. இவருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

Advertising
>
Advertising

Also Read | "LKG படிக்கிறப்போ எலான் மஸ்க் ஒன்னு சொன்னான்.. நான் திகைச்சு போய்ட்டேன்".. மஸ்கின் அப்பா சொன்ன சீக்ரட்.. அப்பவே அப்படியா?

இதில், மூத்த மகனான மூவேந்திரன், வீட்டு உபயோக பொருட்கள் தவணை முறையில் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்துள்ளார்.

அய்யாசாமியின் இளைய மகனான அரவிந்தன், உறவுக்கார பெண் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

எதிர்ப்பு தெரிவித்த அண்ணன்

இதன் காரணமாக, இருவரது வீட்டாரும் பேசி, அரவிந்தனின் கல்யாணத்தை நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து, நேற்று அரவிந்தனின் திருமணம் நடைபெற இருந்த நிலையில், அனைவரும் திருமண மண்டபத்திற்காக திரும்பும் போது, மூத்த மகன் மூவேந்திரன், தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. அண்ணன் நான் இருக்கும் போது , தம்பிக்கு எப்படி திருமணம் செய்து வைக்கலாம் என்று கூறி, அரவிந்தன் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் தெரிகிறது.

கடைசியில் நடந்த அதிர்ச்சி

இதில், தந்தை அய்யாசாமி மற்றும் மூவேந்திரன் இடையே கடும் தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அடுத்த கொஞ்ச நேரத்தில் தகராறு முடியவே, அனைவரும் திருமணத்திற்கு சென்று, நிகழ்ச்சி முடிந்த பின்னர், மீண்டும் வீட்டுக்கு திரும்பி உள்ளனர். அப்போது, அங்கே மூவேந்திரன் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்து இருந்ததாக சொல்லப்படுகிறது. தம்பிக்கு திருமணமான விரக்தியில், அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் உறவினர்கள் கருதினர்.

மூவேந்திரனின் மறைவு குறித்து தகவலறிந்து வந்த போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்வதற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது, மூவேந்திரன் மறைவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், மூவேந்திரன் உடலில் காயங்கள் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

விசாரணையில் தெரிய வந்த உண்மை

இது தொடர்பாக, போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, தந்தை அய்யாசாமி, முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். அப்போது, அவரை விசாரித்ததில், பல அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்தது. தம்பிக்கு திருமணம் செய்து வைக்கப் போவதன் பெயரில், தகராறு நடந்த போது, மகன் மூவேந்திரனை கம்பியால் தாக்கி உள்ளார் அய்யாசாமி. இதில், அவரும் இறந்து போகவே, ஒன்றும் தெரியாதது போல, தற்கொலை நடந்ததாக நாடகம் ஆடியுள்ளார் அய்யாசாமி.

இது தொடர்பாக, அய்யாசாமியிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. திருமணத்தின் பெயரில் நடந்த தகராறில், மகனுக்கு தந்தையால் நேர்ந்த முடிவு, அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Also Read | ஆற்றில் மிதந்த BMW கார்.. அதிர்ந்த மக்கள்.. "போலீஸ் வந்து விசாரிச்சதுல.." கண்கலங்க வைக்கும் காரணம்

THENI, YOUTH, YOUNGER BROTHER, YOUNGER BROTHER MARRIAGE, கல்யாணம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்