சாப்பிட கூப்பிட்டும்.. கண்டுக்காம இருந்த கணவன்.. கோவத்துல மனைவி செஞ்ச பகீர் காரியம்.. சென்னையில் பரபரப்பு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

குடும்பங்களில் நடைபெறும் சிக்கல்கள் குறிப்பாக கொரோனா காலத்தில் அதிக அளவு அதிகரித்து இருப்பதாக கூறுகின்றனர் நிபுணர்கள். புரிதல் இன்மை காரணமாக பூதாகாரமாகும் இந்த சிக்கல்கள் வாழ்க்கையையே வேறு திசைக்கு மாற்றிவிடக்கூடும் ஆபத்தும் உண்டு. அந்த வகையில், சாப்பிட கூப்பிட்டும் கணவர் வராததால் மனைவி ஒருவர் தீக்குளித்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertising
>
Advertising

சொக்கத் தங்கம்... இந்திய வீரரை புகழ்ந்து தள்ளிய சச்சின் டெண்டுல்கர்..!

சென்னையை அடுத்த அம்பத்தூரில் வசித்து வருகிறார் தேவராஜ். இவருடைய மனைவி பெயர் மேகலா. இந்தத் தம்பதிக்கு பூர்ணிமாதேவி என்ற மகளும், நவீன்ராஜ் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில், தேவராஜ் - மேகலா இருவருக்கு இடையே அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்படும் என்கிறார்கள் அக்கம் பக்கத்தினர். இந்நிலையில் நேற்று மேகலா தீக்குளிக்க முயற்சி செய்தது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

சாப்பாடு

தங்களது வீட்டி வழக்கம் போல உணவு தயாரித்த மேகலா, தனது கணவர் தேவராஜை சாப்பிட அழைத்து இருக்கிறார். ஆனால், தேவராஜ் அதனை பொருட்படுத்தாமல் இருந்ததாகத் தெரிகிறது. இதனால் மனமுடைந்த மேகலா, அருகில் இருந்த மண்ணெண்ணெயை தனது உடலில் ஊற்றி தீ வைத்து இருக்கிறார். இதனை அடுத்து மேகலா அலறவே அங்கு ஓடிவந்த தேவராஜ் அவரை காப்பாற்ற முயற்சி செய்து இருக்கிறார்.

இதனால் அவருக்கும் உடலில் தீ காயங்கள் ஏற்பட்டு இருக்கின்றன. இந்நிலையில், தேவராஜ் - மேகலா ஆகிய இருவரும் தற்போது சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

சாப்பிட கூப்பிட்டு கணவர் வராததால் மனமுடைந்த மனைவி தீக்குளித்த சம்பவம் சென்னை மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

"நம்ம போர் விமானங்கள்ல சீனா கொடிய கட்டுங்க.. ரஷ்யா மேல குண்டு போடுங்க".. டொனால்டு ட்ரம்ப் சொன்ன விபரீத யோசனை..!

WIFE, WRONG DECISION, HUSBAND, மனைவி, கணவன், சாப்பாடு

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்