'வாலிபர் கைது'... குற்றம் பெண்ணின் 'மனதை' திருடியது... தீர்ப்பு மனதை திருடிய பெண்ணை 'திருமணம்' செய்வது... வெறித்தனமான வேற லெவல் 'திருமண பேனர்'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சேலம் மாவட்டம் மேட்டூரில் திருமண விழாவிற்காக வித்தியாசமாக வைக்கப்பட்டிருந்த பேனரை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

சேலம் மாவட்டம், மாசிலாபாளையம் பகுதியைச் சேர்ந்த ஹெலன் சிந்தியாவுக்கும், கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடியைச் சேர்ந்த ஸ்டீபன் ராஜ் என்பவருக்கும் வருகிற 30-ந் தேதி திருமணம் நடக்க உள்ளது.

இதற்காக மணமகனின் உறவினர்கள் வித்தியசமான பேனர் ஒன்றை வைத்துள்ளனர். அதில் திருமண விழாவிற்கு பதில் வாலிபர் கைது என்றும், குற்றம் பெண்ணின் மனதை திருடியது என்றும், தீர்ப்பு மனதை திருடிய பெண்ணை திருமணம் செய்வது என்றும் இடம் பெற்றிருந்தது.

இதற்கு சாட்சிகள் அத்தான்மார்கள் என 4 பேரின் புகைப்படங்கள் உள்ளது. இந்த வித்தியாசமான பேனரை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

WEDDING, BANNER, SELAM, WEDDING CEREMONEY, PUBLIC SURPRISED

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்