'தாயை' பார்க்க போன சிறுமியை.. கொடூரமாக 'தாக்கிய' தந்தை.. பதறவைக்கும் காட்சிகள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தந்தைக்கு தெரியாமல் தாயை பார்க்க சென்ற 9 வயது சிறுமியை அவரது தந்தை ரோட்டில் போட்டு அடிக்கும் காட்சிகள் அதிர வைத்துள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் உள்ள கொடிமரத் தெருவில் வசித்து வரும் அப்துல் சமது - மும்தாஜ் தம்பதியருக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்படுவது வழக்கம். அந்தவகையில் கடந்த மாதமும் இருவருக்கும் இடையில் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் மும்தாஜ் அவரது அம்மா வீட்டுக்கு சென்றுவிட்டார்.

குழந்தைகளை சமது அனுப்ப மறுத்து தன்னுடனேயே வைத்திருந்தார்.

இந்தநிலையில் சிறுமி அப்ஸரா தந்தைக்கு தெரியாமல் தாயை பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதனையறிந்த சமது அவரை அடிக்க, அடி தாங்காமல் சிறுமி வீட்டைவிட்டு வெளியில் ஓடி வந்துள்ளார்.அக்கம் பக்கம் இருப்பவர்கள் தடுக்க முயற்சித்தும் சமது ஆத்திரம் தீராமல் சிறுமியை கீழே தள்ளி கழுத்தில் மிதித்து, டியூப் லைட்டால் அடித்து கொடுமையாக தாக்கியுள்ளார்.

கடைசியில் அக்கம் பக்கம் இருப்பவர்கள் சேர்ந்து சமதுவை அடித்து சிறுமியை அவரிடம் இருந்து காப்பாற்றியுள்ளனர். பின்னர் அவர்கள் போலீசில் புகாரளிக்க, போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது தப்பியோடிய சமது மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை தேடி வருகின்றனர். சிறுமியை சமது தாக்கிய சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பலரையும் அதிர வைத்துள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்