'கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன்...' 'திடீர்னு க்ராஸ் ஆன ஒரு பைக்...' என் மகனை இப்படி பண்ணிட்டாங்களே...! - நியாயம் கேட்க போன தாய்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அண்ணா நகர் பகுதியில், கடந்த மாதம் ஜூலை 31-ஆம் தேதி 14 வயது சிறுவன் ஒருவர் வீட்டின் முன்பு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த   சக்திவேல் இரு சக்கர வாகனத்தில் சிறுவனை கடந்து சென்றுள்ளார்.

சிறிது தூரம் சென்ற சக்திவேல், விளையாடி கொண்டிருந்த சிறுவனை அழைத்து அவரது வீட்டிற்கு அழைத்துக் கொண்டு சென்றுள்ளார். ஏதோ உதவிக்காக தான் கூப்பிடுகிறார் என்று நம்பி சென்ற சிறுவனை சக்திவேல் அவரது வீட்டிலேயே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார்.

பயந்து போன சிறுவன் என்ன செய்வதென்று தெரியாமல் தனது பெற்றோரிடம் நடந்த சம்பவங்களை எல்லாம் கூறியுள்ளார். இதையடுத்து சிறுவனின் தாய், சக்திவேலின் வீட்டுக்குச் சென்று அவரது பெற்றோரிடம் நியாயம் கேட்டுள்ளார்.

ஆனால் சக்திவேலின் தவறை உணராத அவரது தாயார், சிறுவரின் தாயை தகாத வார்த்தைகளால் திட்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் சக்திவேல் குறித்து பேராவூரணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

நடந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாகியுள்ள சக்திவேலை தேடி வருகின்றனர். மேலும் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு கடந்த 3 நாட்களாக ஆசனவாய் பகுதியில் தாங்கமுடியாத வலி ஏற்பட்டுள்ளதால், தற்போது பேராவூரணி அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்