"நான் சொன்னதுனால தான் அப்பா கூட்டிட்டு போனாரு".. தென்காசி இளைஞர், குஜராத் பொண்ணு விஷயத்தில் அடுத்து வெளியான பரபர தகவல்!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

குஜராத்தை சேர்ந்த பெண் ஒருவரை தென்காசி இளைஞர் திருமணம் செய்ததாக முதலில் வெளியான விவகாரத்தில் அடுத்தடுத்து பரபரப்பு தகவல் வெளியான வண்ணம் உள்ளது.

Advertising
>
Advertising

                         Images are subject to © copyright to their respective owners.

Also Read | "அவரு அப்ப சாகல".. 100 வருஷம் முன்னாடி நடந்த குற்றம்.. கடிதங்கள் மூலம் இளம்பெண் கண்டுபிடிச்ச திடுக்கிடும் விஷயம்!!

தென்காசி மாவட்டத்தை சேர்ந்த வினித் என்ற இளைஞர், குஜராத் மாநிலத்தை சேர்ந்த கிருத்திகா என்ற இளம்பெண்ணை காதலித்து பெண் வீட்டார் எதிர்ப்பை மீறி திருமணம் செய்ததாக வெளியாகி இருந்தது.

இதனையடுத்து, கிருத்திகாவின் வீட்டார், வினித் வீட்டிற்கு வந்து கிருத்திகாவை தூக்கி சென்றதாகவும் இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி அதிக பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இது பற்றி வினித் தரப்பில் புகார் ஒன்றும் போலீசாரிடம் அளிக்கப்பட்டிருந்ததாகவும் தகவல் வெளியாகி இருந்தது.

Images are subject to © copyright to their respective owners.

இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் பற்றி விசாரிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அப்படி இருக்கையில், கிருத்திகாவின் வீடியோ ஒன்று முதலில் வெளியாகி இருந்தது. அதில், தான் பாதுகாப்பாகவும், நன்றாகவும் இருப்பதாகவும் கிருத்திகா கூற, ஏற்கனவே தனக்கு திருமணம் ஆனதாகவும் தெரிவிக்கிறார். என்னை பற்றி ஏதாவது பிரச்சனை அங்கே ஏற்பட்டால் அது வேண்டாம் என்றும் இது தொடர்பாக யாரையும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும், இந்த விஷயத்தில் யாருக்கும் சம்மந்தம் இல்லை என்றும் கூறும் கிருத்திகா, நடந்தது அனைத்தும் தன்னுடைய விருப்பத்துடன் தான் நடந்தது என்றும் கூறி உள்ளார்.

Images are subject to © copyright to their respective owners.

வினித்தை திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில், ஏற்கனவே வேறொருவருடன் திருமணம் ஆனதாக கிருத்திகா பேசிய வீடியோ, இன்னும் ட்விஸ்ட்டை உருவாக்கியது. இதற்கடுத்து, கிருத்திகா வீடியோ தொடர்பாக பேசிய வினித், ஜனவரி 20 ஆம் தேதி தங்களுக்கு திருமணம் ஆனதாகவும், கிருத்திகா வீட்டில் இருந்து பிரச்சனை வரும் ஏன் கூறிய சூழலில், அவர் கடத்தப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

Images are subject to © copyright to their respective owners.

வினித் மற்றும் கிருத்திகா ஆகிய இருவரும் வீடியோக்களை வெளியிட்டு வந்த சூழலில், தற்போது இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்தக் கூடிய தகவலும் வெளியாகி உள்ளது. கிருத்திகா, வினித்திடம் தொலைபேசி வாயிலாக அழைத்து வழக்கு குறித்து பேசி இருப்பது தொடர்பாக ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

Images are subject to © copyright to their respective owners.

இதே போல, தன்னை வைத்து தந்தையிடம் பணம் வாங்க முயற்சி செய்ததாகவும், தனது கணவர் மைத்ரிக் படேலுக்கு தகவல் கொடுத்து அவர் மூலம் தந்தை வந்து என்னை அழைத்து சென்றதாகவும் குறிப்பிடும் கிருத்திகா, தனது விருப்பப்படி தான் அனைத்தும் நடைபெறுவதாகவும் பேசி உள்ளார்.

Also Read | "ஜஸ்ட் மிஸ்ஸு".. 2007 டி 20 WC ஃபைனல் -ல தோனி போட்ட தப்புக்கணக்கு??.. இத்தனை நாள் கழிச்சு வெளிய வந்த விஷயம்!!

TENKASI, GUJARAT WOMAN ISSUE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்