‘என்ன மன்னிச்சிருங்க ஆச்சி’!.. ‘அவங்க ரொம்ப பாவம்’.. சிக்கிய உருக்கமான கடிதம்..! நொருங்கிபோன குடும்பம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சங்கரன்கோவில் அருகே இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மாவலியூத்து கிராமத்தைச் சேர்ந்தவர் மாடசாமி. இவரது மனைவி மருதக்கனி. இவர்களுக்கு மாரியம்மாள் (18) என்ற மகளும், விக்னேஷ் (15), மகாராஜன் (13) என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். இதில் மாரியம்மாள் சங்கரன்கோவிலில் உள்ள பாட்டி காளியம்மாள் வீட்டில் தங்கி தட்டச்சு படித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை காலை சாமி கும்பிட பாபநாசத்துக்கு காளியம்மாள் சென்றுள்ளார். பின்னர் இரவு 9 மணியளவில் காளியம்மாள் வீடு திரும்பியபோது வீட்டில் பேத்தி இல்லாததைக் கண்டு அதிர்ச்சியைடைந்துள்ளார். உடனே அருகில் உள்ள உறவினர்களிடம் விசாரித்துள்ளார். ஆனால் பேத்தி குறித்த தகவல் கிடைக்கவில்லை.
இதனை அடுத்து சனிக்கிழமை காலை அப்பகுதியில் உள்ள கிணற்றில் மாரியம்மாள் சடலமாக கிடந்ததைப் பார்த்துள்ளனர். தகவலறிந்து தீயணைப்பு வீரர்களுடன் விரைந்து வந்த போலீசார் மாரியம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் நடத்திய விசாரணையில், மாரியம்மாள் எழுதியதாக கூறப்படும் கடிதம் ஒன்று கைப்பற்றியுள்ளனர். அதில், தன் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்றும், தன்னால் முடிந்த அளவுக்கு படிச்சு பார்த்தும் முடியவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மாரியம்மாள் தட்டச்சு தேர்வில் தோல்வியடைந்ததால் மனமுடைந்து தற்கொலை செய்திருக்காலம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- தாய்க்கு ‘மெசேஜ்’ அனுப்பிவிட்டு... ‘திருமணமான’ ஐந்தே ஆண்டுகளில் இளம்பெண் எடுத்த ‘முடிவு’... கணவருக்கு காத்திருந்த ‘பேரதிர்ச்சி’...
- ‘கோயிலுக்கு போயிருந்த பெற்றோர்’.. ‘வீட்டில் தனியாக இருந்த மகன்’.. சென்னையில் நடந்த சோகம்..!
- ‘நான் அத எடுக்கல சார்’!.. ‘அப்பா இல்லாத பையன்’.. 9ம் வகுப்பு மாணவன் எடுத்த முடிவு.. நெஞ்சை உருக்கும் சோகம்..!
- 'தம்பி 'கிளாஸ் ரூம்'ல பண்ற வேலையா இது'... 'டென்ஷன் ஆன பேராசிரியை'... மாணவன் செய்த கோர செயல்!
- ‘காவி வேஷ்டி’.. கிணற்றில் ‘தலைகுப்புற’ கிடந்த சாமியார் சடலம்.. வெளியான திடுக்கிடும் தகவல்..!
- ‘நிச்சயம் உலக அளவில் இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பேன்!’.. நாசா செல்லும் வாய்ப்பைப் பெற்ற பொறியியல் மாணவி!
- 'நண்பன்னு நம்பி தானே உன்ன வீட்டுக்குள்ள விட்டேன்'...'இப்படி சீரழிச்சிட்ட'... நெஞ்சை உருக்கும் சோகம்!
- ‘போதையில் மனைவியுடன் தகராறு!’.. ‘அறைக்குள் சென்று பூட்டிக்கொண்ட கணவர்’.. காவலர்களின் சமயோஜிதத்தை ‘நேரில் அழைத்து பாராட்டிய’ காவல் ஆணையர்!
- 'கையில சுத்தமா பணம் இல்ல... ஊர்லயும் 'தலைகாட்ட' முடியாது... லாட்ஜில் 'உயிருக்கு' போராடிய பெண்... கடற்கரையில் சடலமாகக் கிடந்த காவலர்!
- நண்பர்களோடு ‘சிக்கிய’ காதலன்... ‘16 வயது’ சிறுமிக்கு நேர்ந்த ‘பரிதாபம்’... விசாரணையில் வெளியான ‘அதிர்ச்சி’ தகவல்...