"ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சு..".. தென்காசி பரபரப்பு சம்பவத்தில் புதிய வீடியோ வெளியிட்ட குஜராத் பெண்.!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

குஜராத் மாநிலத்தை சேர்ந்த பெண்ணை தமிழக இளைஞர் திருமணம் செய்த கொண்டதாக தகவல் வெளியாகி இருந்த சூழலில், அந்த பெண்ணை அவரது வீட்டார் வீடு புகுந்து வலுக்கட்டாயமாக  தூக்கி சென்றதாக புகார் எழுந்திருந்தது.

Advertising
>
Advertising

                        Images are subject to © copyright to their respective owners.

Also Read | தீவிபத்தில் தாய், தாத்தா, பாட்டி மரணம்.. "கல்யாணம் நல்லபடியா நடக்கணும்".. திருமணம் முடிஞ்சதும் சொன்ன தந்தை .. நொறுங்கிப் போன மணப்பெண்.!!

தென்காசி மாவட்டத்தை சேர்ந்த வினித் என்ற இளைஞர் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அதே பகுதியில் குஜராத் மாநிலத்தை சேர்ந்த கிருத்திகாவும் குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இதனிடையே, வினித் மற்றும் கிருத்திகா ஆகிய இருவரும் காதலித்து பெண் வீட்டார் எதிர்ப்பை மீறி திருமணமும் செய்து கொண்டதாக தகவல் வெளியாகி இருந்தது.

இதனையடுத்து, கிருத்திகாவின் வீட்டார், வினித் வீட்டிற்கு வந்து கிருத்திகாவை தூக்கி சென்றதாகவும் இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி அதிக பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக, வினித் தரப்பில் புகார் ஒன்றும் போலீசாரிடம் அளிக்கப்பட்டிருந்ததாகவும் தகவல் வெளியாகி இருந்தது.

இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் பற்றி விசாரிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அப்போது கடத்தப்பட்டதாக கூறப்பட்ட இளம்பெண் கிருத்திகா பேசும் வீடியோ ஒன்று வெளியாகி பெரிய அளவில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

Images are subject to © copyright to their respective owners.

முன்னதாக, கிருத்திகாவுக்கு ஏற்கனவே உறவினர் ஒருவருடன் திருமணம் ஆனதாகவும், அதற்கான ஆதாரத்தையும் அவரது தந்தை போலீசாரிடமும் சமர்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இதற்கு மத்தியில், கிருத்திகா பேசும் வீடியோ ஒன்றும் பெரிய அளவில் பரபரப்பை உண்டு பண்ணி உள்ளது.

இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோவில், தான் பாதுகாப்பாகவும், நன்றாகவும் இருப்பதாக கிருத்திகா குறிப்பிட்டுள்ளார். மேலும், ஏற்கனவே தனக்கு திருமணம் ஆனதாக குறிப்பிடும் கிருத்திகா, தற்போது அவருடன் நலமாக உள்ளதாகவும், எனக்கு யாரும் அழுத்தம் தரவில்லை என்றும் தெரிவித்துள்ளார். என்னை பற்றி ஏதாவது பிரச்சனை அங்கே ஏற்பட்டால் அது வேண்டாம் என்றும் இது தொடர்பாக யாரையும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும், இந்த விஷயத்தில் யாருக்கும் சம்மந்தம் இல்லை என்றும் கூறும் கிருத்திகா, நடந்தது அனைத்தும் விருப்பத்துடன் தான் நடந்தது என்றும் கூறி உள்ளார்.

Also Read | "நிலாவுல மாட்டிக்கிட்டேன்.. 100க்கு போன் பண்ண முடியல".. நெட்டிசனின் போஸ்ட்.. போலீசின் வேறலெவல் ரிப்ளை..!

TENKASI, BRIDE, MARRIAGE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்