அவரை தான் கல்யாணம் பண்ணிப்பேன்.. பிடிவாதமாக நின்ற பட்டதாரி பெண்.. பெற்ற மகள் என்றும் பாராமல் கோபத்தில் அப்பா செய்த கொடூரம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மகள் காதல் விவகாரத்தில் தந்தை செய்த அதிர்ச்சி காரியம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

தகாத உறவுக்கு தடையாக இருந்த கணவர்.. விபரீத முடிவெடுத்த மனைவி.. கோபத்தில் டிராக்டர் எடுத்துக்கிட்டு காதலன் செஞ்ச காரியம்..!

தென்காசி

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆரியங்காவூர் சுடலை மாடசாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் வேல்சாமி (வயது 51). இவரது மனைவி ராஜாத்தி. இவர் பீடி சுற்றும் தொழில் செய்து வருகிறார். இந்த தம்பதிக்கு 2 மகன்கள், சுதா (வயது 22) என்ற மகள் உள்ளனர். இதில் சுதா,  பி.எஸ்.சி. பட்டப்படிப்பை முடித்துவிட்டு அம்மாவுக்கு உதவியாக பீடி சுற்றும் தொழில் செய்து வருகிறார்.

மகள் காதல் விவகாரம்

இந்த சூழலில் அதே ஊரைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை சுதா காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. அதனால் அந்த இளைஞருடன் காதல் திருமணம் செய்வது தொடர்பாக தந்தை வேல்சாமியிடம் சுதா கூறியுள்ளார். ஆனால் வேல்சாமி இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் தந்தைக்கும், மகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த வேல்சாமி, வீட்டில் இருந்த அரிவாளால் மகள் சுதாவை வெட்டியுள்ளார்.

ஆத்திரத்தில் தந்தை செய்த காரியம்

இதில் படுகாமடைந்த சுதாவை உறவினர்கள் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனை அடுத்து மேல் சிகிச்சைக்காக  பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் சுதா அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே தந்தை வேல்சாமி  சரணடைந்துள்ளார். அவரை கைது செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதல் விவகாரத்தில் பெற்ற மகளை தந்தையே அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமும் குடிச்சிட்டு வந்து ஒரே தொல்லை.. வீட்டில் கேட்ட கணவனின் அலறல் சத்தம்.. மனைவி செய்த பரபரப்பு காரியம்..!

TENKASI, FATHER ATTACKS, DAUGHTER, LOVE ISSUE, மகள், காதல் விவகாரம், கல்யாணம், பட்டதாரி பெண், தென்காசி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்