பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலர் தினத்தில் திருநம்பியை கரம்பிடித்த இளம்பெண்!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஈரோடு மாவட்டம், கோபிச் செட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் அருணா தேவி. பட்டதாரியான இவர் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த அருண் பாஷ் என்பவரை கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

Advertising
>
Advertising

                           Images are subject to © copyright to their respective owners.

Also Read | "நல்லா இருக்கீங்களா ரிஷப்?".. குட்டீஸ்கள் அனுப்பிய லெட்டர்.. ரிஷப் பண்டின் நெகிழ்ச்சி பதிவு..!

அருண் பாஷ் பெண்ணாக பிறந்து ஆணாக மாறிய திருநம்பி ஆவார். இதனிடையே, அருணா தேவி மற்றும் அருண் பாஷ் ஆகியோரிடையே உள்ள காதலுக்கு அவர்கள் பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதனைத் தொடர்ந்து, ஒன்றாக இணைந்து வாழவும் வேண்டுமென முடிவு செய்த அருணா தேவி மற்றும் அருண் ஆகியோர் தங்களின் வீட்டை விட்டு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக வெளியேறி ஒன்றாக தங்கி வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

Images are subject to © copyright to their respective owners.

தொடர்ந்து, ஒன்றாக இணைந்து வாழ வேண்டும் என்றும் முடிவு செய்திருந்த அவர்கள், ஈரோடு கோபி செட்டிபாளையத்தில் உள்ள மனிதம் சட்ட உதவி மையத்தில் வைத்து காதலர் தினமான நேற்று (14.02.2023) சீர்திருத்த திருமணம் செய்து கொண்டனர். பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி, காதலர் தினத்தில் திருநம்பி ஒருவர் இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்ட செய்தி தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் கூட கேரள மாநிலத்தை சேர்ந்த திருநர் தம்பதிக்கு குழந்தை பிறந்திருந்த செய்தி, அதிகம் பேசு பொருளாக மாறி இருந்தது. இதில், பெண்ணாக பிறந்து ஆணாக மாறி இருந்த திருநம்பி தான் கருவுற்று குழந்தை பெற்றுக் கொண்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Also Read | கோலி & ஜடேஜாவின் பதான் டான்ஸ்.. நடிகர் ஷாருக் கானின் கலகல கமெண்ட்.. வைரலாகும் வீடியோ..!

TAMIL NADU WOMAN, MARRIED, TRANS MAN, VALENTINES DAY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்