மாஸ்க், சானிடைசர் உள்ளிட்ட கொரோனா தடுப்பு உபகரணங்களுக்கு ‘விலை’ நிர்ணயம்.. தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரோனா தடுப்பு உபகரணங்களுக்கு புதிய விலை நிர்ணயித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு, பொதுமக்கள் கிருமிநாசினி, முகக்கவசம் உள்ளிட்ட கொரோனா தடுப்பு பொருட்களை பயன்படுத்தவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பேரிடர் காலத்தில் லாப நோக்கில் சிலர் கொரோனா தடுப்பு உபகரணங்களை அதிக விலைக்கு விற்பதாக புகார்கள் எழுந்தன. இதை கட்டுப்படுத்த வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில், கிருமிநாசினி, முகக்கவசம் உள்ளிட்ட கொரோனா தடுப்பு உபகரணங்களுக்கு விலை நிர்ணயித்து அதற்கான பட்டியலை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி,

1. இரண்டு அடுக்கு சர்ஜிக்கல் மாஸ்க் விலை ரூ.3

2. மூன்று அடுக்கு சர்ஜிக்கல் மாஸ்க்கின் அதிகபட்ச விலை ரூ.4.50

3. கிருமிநாசினி 200 மி.லி - ரூ.110

4. N95 முகக்கவசம் - ரூ.22

5. கையுறை - ரூ.15

6. ஆக்சிஜன் மாஸ்க் - ரூ.54

7. பிபிஇ கிட் - ரூ.273

8. பல்ஸ் ஆக்சிமீட்டர் - ரூ. 1,500

9. ஒரு முறை பயன்படுத்தப்படும் ஏப்ரானின் அதிகபட்ச விலை ரூ.12,

10. அறுவை சிகிச்சை நிபுணர்கள் அணியும் கவுனின் அதிகபட்ச விலை ரூ.65 என தமிழ்நாடு அரசு நிர்ணயம் செய்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்