மதுப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்!.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!.. டாஸ்மாக் நிர்வாகம் பரபரப்பு தகவல்!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் டாஸ்மாக் பார்களை நிபந்தனைகளுடன் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் இருக்கும் பார்களுக்கு அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் டாஸ்மாக் பார்களை நாளை முதல் நிபந்தனைகளுடன் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 50 சதவீதம் பேர் மட்டுமே பாரில் அனுமதிக்கப்பட வேண்டும். கொரோனா அறிகுறி இல்லாதவர்களை மட்டுமே பார்களில் அனுமதிக்க வேண்டும். பார்களுக்கு வருவோருக்கு வெப்ப பரிசோதனை கட்டாயம் செய்யப்பட வேண்டும்.

பார்களின் நுழைவு வாயில்களில் சானிடைசர்களை வைக்க வேண்டும். சமூக இடைவெளியுடன் இருக்கைகள் அமைக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை டாஸ்மாக் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்