தமிழ்நாட்டில் ஜூன் 28ம் தேதி வரை... 'புதிய தளர்வுகளுடன்' ஊரடங்கு நீட்டிப்பு!.. எவை இயங்கும்?.. எவை இயங்காது?.. முழு விவரம் உள்ளே!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழ்நாட்டில் நாளை (21.6.2021) முதல் ஜூன் 28ம் தேதி வரை, புதிய தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் கடந்த மே 24 முதல் தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அடுத்தடுத்து மே 31, ஜூன் 7, ஜூன் 14-ம் தேதி என 3 கட்டமாக முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. எனினும், தொற்று அதிகமாக இருந்த 11 மாவட்டங்களில் குறைவான தளர்வுகளும் மீதமுள்ள சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் அதிகமான தளர்வுகளும் அளிக்கப்பட்டன.

இந்த நிலையில், தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நாளை முதல் ஜூன் 28 வரை கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதில், கொரோனா தொற்று பாதிப்பு அடிப்படையில், தமிழ்நாட்டின் மாவட்டங்கள் 3 வகையாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வகை மாவட்டத்துக்கும் ஊரடங்கில் தளர்வுகள் வேறுபடுகின்றன.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்