தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 1,630 பேர் குணமடைந்துள்ளனர்!.. அதிக அளவில் பரிசோதனை!.. அதிகரிக்கும் எண்ணிக்கை?.. முழு விவரம் உள்ளே
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,115 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்த அறிவிப்புகள் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று வெளியான தகவலில் இன்று மட்டும் தமிழகத்தில் 2,115 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 54,449 ஆக உயர்ந்துள்ளது. இதனை பாலின ரீதியாக பகுப்பாய்வு செய்ததில் 33,520 ஆண்களும், 20,909 பெண்களும், 20 திருநங்கைகளும் பாதிக்கப்பட்டிருப்பதாக அறியப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 666 ஆக உயர்ந்திருக்கிறது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 30,271 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே, 23,509 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் இன்று ஒரே நாளில் 1,322 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 38,327 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் தற்போதுவரை 8,27,980 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில், இன்று மட்டும் 27,537 கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், மொத்த பாதிப்பில், 28,132 ஆண்களும், 17,147 பெண்களும், 20 திருநங்கைகளும், 13 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- திடீரென கட்டான கரண்ட்... முழு கவச உடையுடன் 'லிப்ஃட்'டுக்குள் சிக்கிய நர்ஸ்... அடுத்து நடந்த விபரீதம்!
- 'எங்க அடிச்சா வலிக்கும்னு கொரோனாவுக்கு நல்லா தெரிஞ்சிருக்கு!'.. அடுத்தடுத்து அரங்கேறும் துயரம்!.. சவாலை சந்திக்க தயாராகும் காவல்துறை!
- கொரோனாவ 'திரும்ப' கொண்டு வந்துருச்சு... அந்த 'மீன்' எங்களுக்கு வேணவே வேணாம்... 'அலறி' ஓடும் சீனர்கள்!
- "ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!".. 'போன்' பண்ணிய 15 வயது 'சிறுவன்'!.. 'அதிர்ந்த' போலீஸார்!
- “4 பேருக்கு கொரோனா உறுதி!”.. முதல்வர் அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு வந்த பரிசோதனை முடிவுகள்!
- ‘மூடப்பட்ட சென்னையின் எல்லைகள்’.. அமலுக்கு வந்த ‘முழு ஊரடங்கு’.. இந்த 12 நாள் என்னென்ன இயங்கும்? எவை இயங்காது..?
- "பேங்க்-க்கு போறதுக்கு முன்னாடி இத தெரிஞ்சுக்கங்க!".. 'சென்னை' உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 'வங்கி' சேவைகளில் இன்று முதல் புதிய 'கட்டுப்பாடுகள்'!
- VIDEO: கார்ல கொரோனாவுக்கு பலியானவங்க ‘சடலம்’ இருக்கு சார்.. ‘சவப்பெட்டியை’ திறந்து பார்த்து மிரண்டுபோன போலீஸ்..!
- '5 நாட்களில் குணமாகும் கொரோனா நோயாளிகள்'... 'இந்த சிகிச்சையை விரிவுபடுத்தலாம்'... தமிழக அரசு அதிரடி முடிவு!
- 'மக்களுக்கு 'புரியவில்லையா...' அல்லது 'வேறு' வழியில்லாமல் 'விதி மீறுகிறார்களா?...' 'அலட்சியத்தால்' ஆபத்தை நோக்கி செல்லும் 'கோவை...'