தமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்!.. பிரிட்டனில் இருந்து வந்தவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா?.. சென்னையின் நிலை என்ன?.. முழு விவரம் உள்ளே

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் இன்று (17-01-2021) ஒரே நாளில் 589 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் கொரோனா பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 8,30,772 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 164 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. .

மேலும், பிரிட்டனில் இருந்து வந்தவர்களில் இதுவரை 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் இன்றைய தினம் 770 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8,12,568 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்புக் காரணமாக இன்று மொத்தம் 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இதன்காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,264 ஆக உயர்ந்துள்ளது என குறிப்பிட்டுள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்