'நடிகை நல்லெண்ணெய் சித்ரா திடீர் மரணம்'... 'மாரடைப்பால் அதிகாலையில் பிரிந்த உயிர்'... ரசிகர்கள் அதிர்ச்சி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நல்லெண்ணெய் விளம்பரத்தில் நடித்ததன் மூலம் நல்லெண்ணெய் சித்ரா என்றே ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.

'சேரன் பாண்டியன்' படத்தின் மூலமாகப் பிரபலமடைந்தவர் நடிகை சித்ரா. இவர் 80'களில் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக அறியப்பட்டவர். சேரன் பாண்டியன்' படத்தில் சரத்குமாரின் தங்கையாக நடித்த இவரது கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகப் பேசப்பட்டது.

பின்னர் சினிமா, சீரியல்களில் பிசியாக நடித்து வந்த சித்ரா ஒரு நல்லெண்ணெய் விளம்பரத்தில் நடித்த பின்னர் நல்லெண்ணெய் சித்ராவாகவே அடையாளப்படுத்தப்பட்டார். சென்னை சாலிகிராமத்தில் கணவர் மற்றும் மகளுடன் வசித்துவந்த சித்ரா இன்று அதிகாலை மாரடைப்பால் திடீரென மரணமடைந்தார். அவரது திடீர் மரணம் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே கடந்த மே 21-ம் தேதி தான் சித்ரா தனது பிறந்த நாளை கொண்டாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்