நேருக்கு நேர் மோதிக்கொண்ட பைக்குகள்... தாம்பரம் அருகே... தனியார் நிறுவன... இளம் ஊழியருக்கு நேர்ந்த பரிதாபம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் புதுப்பேட்டையை சேர்ந்தவர் அய்யப்பன் (32). இவருக்கு ரமணி என்ற மனைவியும்,  தீனப்பிரியா (4) என்ற மகளும், ஒன்றரை வயதில் தருண் என்ற மகனும் உள்ளனர். தாம்பரம் சானடோரியத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைப் பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை, சித்தாமூர் ஊராட்சி ஒன்றியம் வெண்மாலகரத்தில் வசித்து வரும் தனது பெற்றோரை காண அய்யப்பன் பைக்கில் சென்றுள்ளார்.

பின்னர் அங்கிருந்து இரவு 7 மணிக்கு வீடு திரும்பி கொண்டிருந்தார்.  அப்போது இரும்புலி கூட்ரோடு அருகே சென்றபோது, எதிரே வந்த மணிகண்டன் என்பவரது  பைக்கும், அய்யப்பனின் பைக்கும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் அய்யப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தில் மணிகண்டனுக்கு கால்கள் முறிந்ததால் கதறித் துடித்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அச்சரப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அய்யப்பன் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட மணிகண்டனுக்கு அதே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து அச்சரப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ACCIDENT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்