'மைதானத்தில் நீங்க, பெவிலியன்ல நான்'... 'உற்சாகத்துடன் களமிறங்கிய காவியா'... மீண்டும் ரசிகர்கள் கவனத்தை பெற்ற காவியா!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஐபிஎல் போட்டிகள் ஆரம்பித்துள்ள நிலையில் காவியா மாறனின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐ.பி.எல் தொடரில் ஒவ்வொரு அணிகளுக்கும் இருக்கும் நட்சத்திர பட்டாளம்போல், குறிப்பிட்ட சில அணிகளின் உரிமையாளர்களுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பஞ்சாப் அணி உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா, கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாரூக்கான் வரிசையில், சன்ரைசர்ஸ் அணியின் உரிமையாளரான காவியா மாறனுக்கும் ரசிகர்கள் இருக்கின்றனர்.

தமிழகத்தில் பிரபல தொழிலதிபரும், சன்டிவி உரிமையாளருமான கலாநிதி மாறனின் மகள் காவியா மாறன். ஹைதராபாத் அணியின் உரிமையாளராக மட்டுமல்லாது சன்டிவி குழுமத்திலும் முக்கிய பொறுப்பில் காவியா மாறன் இருந்து வருகிறார். போட்டியின்போது மட்டுமல்லாது சென்னையில் நடைபெற்ற ஐ.பி.எல் ஏலத்தின்போதே, சன்ரைசரஸ் அணிக்காகக் காவியா கலந்து கொண்டார்.

சென்னையில் நடைபெற்ற கொல்கத்தா, சன்ரைசர்ஸ் அணிகள் மோதும் போட்டியை நேரில் கண்டுகளித்த அவர் சன்ரைசர்ஸ் வீரர்களை உற்சாகப்படுத்தினார். சன்ரைசர்ஸ் அணியின் உரிமையாளரான அவர், வீரர்கள் அடிக்கும் பவுண்டரிக்கும், சிக்சர்களுக்கும் கைதட்டி ஆரவாரம் செய்தார். இதனிடையே இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங்கை விளையாடி கொல்கத்தா 20 ஓவர் முடிவில் 187 ரன்கள் எடுத்தது. கடினமான இலக்கு என்றாலும் சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் காவ்யா மாறன் இருந்தார்.

இதனிடையே பேரிஸ்டோவ் சிறப்பாக விளையாடியபோது, மகிழ்ச்சியில் இருந்த காவியாவுக்குப் போட்டிக்கு இணையாக அவரையும் கேமராக்கள் ஃபோகஸ் செய்தன. அதேநேரத்தில் முதல் போட்டி த்ரில்லர் முடிவை நோக்கிச் சென்றதால், பார்வையாளர்கள் மாடத்திலிருந்த காவியாவும் பரபரப்பாகக் காணப்பட்டார். ஒவ்வொரு போட்டியிலும் தவறாமல் ஆஜராகிவிடும் காவியாவின் ஆரவாரம் நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்