'எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை'... 'எஸ்.பி.பி சரண் சொன்ன குட் நியூஸ்'... நிம்மதி அடைந்த ரசிகர்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்றும் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி.சரண் வெளியிட்டுள்ள தகவல் அவரது ரசிகர்களை நிம்மதி அடையச் செய்துள்ளது.

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த மாதம் 5-ந்தேதி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சில தினங்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. இதனால் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றி செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை குறித்து வீடியோ வெளியிட்டுள்ள சரண், தனது தந்தை உடல்நிலை முன்னேற்றம் அடைந்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

வெண்டில்லேட்டர் உதவியுடனே இன்னும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகக் கூறியுள்ள அவர், நல்ல செய்தியாக அவருக்கு கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் வந்திருப்பதாகவும் கூறியுள்ளார். அத்துடன் எஸ்.பி.பாலசுப்ரமணியன் தனது ஐ-பேட் மூலம் கிரிக்கெட், டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டுகளைக் காண்பதாகவும், விரைவில் தொடங்கவுள்ள ஐபிஎல் போட்டியை அவர் காண ஆர்வத்துடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அவர் நன்றாக எழுதுவதாகவும், தங்களிடம் நன்றாகத் தொடர்புகொள்வதாகவும் சரண் கூறியிருக்கிறார்.

எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை சரியாக வேண்டும் என ரசிகர்கள் பலரும் பிரார்த்தனையில் ஈடுபட்டு வரும் நிலையில், அவரது மகன் எஸ்.பி.பி.சரண் வெளியிட்டுள்ள தகவல் அவரது ரசிகர்களை நிம்மதி அடையச் செய்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்