படிக்க சொல்லி வற்புறுத்திய தந்தை... 16 வயது மகனால் தந்தைக்கு நேர்ந்த கொடூரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொத்தனரை அடித்துக்கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்டதாக, குடும்பமே சேர்ந்து நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள சூராணம் காலனியை சேர்ந்தவர் கர்ணன் (45). கொத்தனாராக வேலை செய்து வரும் இவருக்கு, குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இவரது மனைவி செல்வராணி. இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், இவர்களது 2-வது மகன் பிரகாஷ் ராஜ் (16) என்பவருக்கு படிப்பு சரியாக வராததால், படிப்பை விட்டுவிட்டு எலக்ட்ரீஷியனாக வேலை செய்து வருகிறார். ஆனால், தினமும் மாலை குடித்துவிட்டு வரும் கர்ணன், மீண்டும் படிக்க சொல்லி வற்புறுத்தி, மகனிடமும், மனைவியிடமும் சண்டையிட்டு வந்துள்ளார்.

வழக்கம்போல், கடந்த செவ்வாய்கிழமை அன்றும் குடிபோதையில் வீட்டில் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகன் பிரகாஷ் ராஜ், அங்கு கிடந்த உருட்டு கட்டையை எடுத்து தந்தையின் தலையில் அடித்துள்ளார். மேலும் மூத்த மகன் பிரவீன்குமார் மற்றும் தாயார் செல்வராணி ஆகியோரும் சேர்ந்து கர்ணனை தாக்கியதாக தெரிகிறது. இதனால் பலத்த காயம் அடைந்து மயங்கி விழுந்த கர்ணனை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இதையடுத்து அவரது உடலை வீட்டிற்கு எடுத்து வந்த அவர்கள், குடும்ப பிரச்சினையில் கர்ணன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடி அவரது உடலை அடக்கம் செய்ய முயன்றனர். ஆனால் சந்தேகமடைந்த கர்ணனின் உறவினர்கள், இதுகுறித்து இளையான்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், இந்த சம்பவம் பற்றி தெரியவந்துள்ளது.  இதையடுத்து மனைவி செல்வராணி, மகன்கள் பிரகாஷ்ராஜ், பிரவீன்குமார் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

MURDERED

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்