வீட்டில் இருந்து வந்த துர்நாற்றம்.. தோண்டப்பட்டு கிடந்த தரை.. தனியாக இருந்த மகன்.. அரண்டு போன கிராமம்..

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே புதுப்பட்டினம் கிராமம், மேல தெருவை சேர்ந்தவர் இந்திராணி (வயது 65). இவரது கணவர் சண்முகம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதாக கூறப்படுகிறது.

Advertising
>
Advertising

அயோத்தி நதியில் கணவன் - மனைவி இடையே நடந்த சம்பவம்.. ரவுண்டு கட்டிய பக்தர்கள்.. சர்ச்சையை உண்டு பண்ண வீடியோ

இதன் பின்னர் தனது மகன் பிரபாகரனுடன் சேர்ந்து வசித்து வந்துள்ளார் இந்திராணி. 35 வயதாகும் பிரபாகரனுக்கு, கஞ்சா, மது பழக்கம் ஆகியவற்றிற்கு அடிமையாக இருந்ததால், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மனநலமும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, பிரபாகரன் எப்போதும் தனியாக இருந்து பேசிக் கொண்டிருப்பது, ஒரே உடையை மாற்றாமல் அணிந்து கொண்டிருப்பது, தாய்க்கும் எந்த உதவி செய்யாமல் இருந்து வந்தது என தனது நாளை கழித்து வந்துள்ளார்.

வெளியே வராத தாய்..

மகனின் நிலை காரணமாக தனியாக வேலைக்கு சென்று மகனை பராமரித்து வந்துள்ளார் இந்திராணி. அப்படி ஒரு சூழ்நிலையில், கடந்த சில தினங்களாக தண்ணீர் எடுக்கவும், வேறு எந்த காரணங்களுக்காகவும் கூட வீட்டில் இருந்து வெளியே வராமல் இருந்துள்ளார் இந்திராணி. அது மட்டுமில்லாமல், இந்திராணி வீட்டைச் சுற்றி துர்நாற்றமும் வீசி வந்ததாக கூறப்படுகிறது.

இதனால், அக்கம் பக்கத்தினர் அனைவரும் சந்தேகமடைந்து இந்திராணியின் வீட்டிற்கு வந்து பார்த்துள்ளனர். அப்போது, அங்கு பிரபாகரன் மட்டும் தனியாக இருக்கவே, தாய் எங்கே என வந்தவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு பிரபாகரன் பதில் எதுவும் சொல்லாமல் இருக்கவே, அவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது அங்கே தரை பெயர்க்கப்பட்டு, மண் பெயர்க்கப்பட்டும் இருந்துள்ளது. இதனால், உடனடியாக அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தரையை தோண்டி பாத்ததுல..

இதன் பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அங்கு தரை பெயர்க்கப்பட்டு இருந்த இடத்தை தோண்டிப் பார்த்தனர். மூடப்பட்டிருந்த மண்ணைத் தோண்டிப் பார்த்த போது, இந்திராணியின் உடல் உள்ளே இருப்பது தெரியவந்தது. இதன் பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனை செய்து பார்த்ததில், இந்திராணி உடல்நலம் பாதிக்கப்பட்டு தான் உயிரிழந்தார் என்பது உறுதியாகி உள்ளது.

உயிரிழந்த தாயின் உடலை என்ன செய்வதென்று தெரியாமல் மனநலம் பாதிக்கப்பட்ட மகனான பிரபாகரன், வீட்டுக்குள்ளேயே குழி தோண்டி புதைத்து இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. மேலும், மகனை பராமரித்து வந்த இந்திராணியும் இறந்து போனதால் விரைவில் பிரபாகரனை மீட்டு மனநல காப்பகத்தில் சேர்க்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்த தாயை மனநலம் பாதிக்கப்பட்ட மகன் வீட்டிற்குள்ளேயே குழிதோண்டிப் புதைத்த சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read | "3 வருஷம் ஆயிடுச்சு.." மீனவர் வலையில் சிக்கிய 'அதிசயம்'.. " அட, இது எப்படி நம்ம ஊருல?!"

SIRKAZHI, VILLAGE PEOPLE, YOUTH ACTIVITY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்