Video : "கயல்விழியிடம் செலவுக்கு பணம் கேட்டா பதில் இப்படிதான் வரும்"... போட்டு உடைத்த சீமான் 😍 Exclusive

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது மனைவி கயல்விழி தங்களது காதல் பயணம் குறித்து பேசியுள்ளனர்.

Advertising
>
Advertising

தமிழக அரசியல் சூழலில் பரபரப்பாக இயங்கி வருபவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். அண்மையில் Behindwoods 'மக்களுடன் சீமான்' எனும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியை கலக்க போவது யாரு T.சரவண குமார் மற்றும் அசார் ஆகியோர் தொகுத்து வழங்கினர். இதில் தனது மனைவி கயல்விழியுடன் கலந்துகொண்ட சீமான் தங்களது வாழ்க்கை அனுபவம் குறித்து பல்வேறு தகவல்களை மக்களுடன் பகிர்ந்துகொண்டார்.

இதனை தொடர்ந்து, தங்களுடைய முதல் சந்திப்பு பற்றியும், பின்னர் அது காதலாக மாறிய விதம் குறித்தும் இருவரும் பேசினர். அப்போது, இருவரிடமும் இருவரது புகைப்படமும் ஒட்டப்பட்ட இரண்டு போர்டுகள் கொடுக்கப்பட்டன. தொகுப்பாளர்களின் கேள்விகளுக்கு பொருத்தமானவர்களின் போர்டை உயர்த்த வேண்டும் என இருவரிடமும் சொல்ல, அங்கிருந்த அனைவரும் ஆர்வமடைந்தனர்.

அப்போது வீட்டின் எதிர்காலம் குறித்து எப்போதும் சிந்திப்பவர் யார்? என தொகுப்பாளர் சரவணன் கேட்க, சீமான் தனது மனைவியின் புகைப்படத்தை உயர்த்தினார். கயல்விழி, சீமானின் புகைப்படத்தை உயர்த்த,"இரண்டு பேரும் விட்டுக்கொடுக்காம பேசுறீங்க" என சரவணன் சிரித்துக்கொண்டே சொன்னார். அப்போது பேசிய சீமான்,"தம்பி எனக்கு வீட்டை பத்தி ஒண்ணுமே தெரியாது. செலவுக்கு ஒரு 1000 ரூபாய் கொடுன்னு கேட்டா.. எதுக்கு?" எனக் கேட்பார் என சொல்லும்போதே இடைமறித்த கயல்விழி,"இவ்வளவு காசு உங்களுக்கு எதுக்கு?" எனச் சொல்ல "ஆமா அதையே தான் சொல்லுவாங்க" என ஜாலியாக சொன்னார் சீமான்.

தொடர்ந்து பேசிய சீமான்,"நிறுத்தத்துல யாராவது காசு கேட்டா சங்கடமா இருக்கும். அவங்களுக்குன்னு கார்ல 10, 20ரூ போட்டு வைச்சிருப்போம். அதுக்குமேல எனக்கு செலவு எதுவுமில்லை. எல்லாமே அவங்க தான் பாத்துக்குவாங்க" என்றார்.

 

SEEMAN, KAYALVIZHI, NTK

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்