விபரீதத்தில் முடிந்த இரண்டாம் கல்யாணம்.. கணவனிடம் போலீசார் விசாரணை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

வேலூர்:  குடும்ப பிரச்னை காரணமாக மனைவியை அடித்து கொன்றதாக கணவனை போலீசார் கைது செய்தனர்.

Advertising
>
Advertising

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த ஓங்கப்பாடி  கிராமத்தை  சேர்ந்தவர்  கண்ணியப்பன்  மகன்  ரவி(33). இவருக்கு  ஏற்கனவே  திருமணமாகி  மனைவி  பிரிந்து சென்று  விட்டார். அதேபோல்,  ஆம்பூர்  அடுத்த  மேல்சானங்குப்பம்  கிராமத்தை  சேர்ந்தவர்  சங்கர்  மகள்  சத்யா(26).  இவருக்கும்  ஏற்கனவே  திருமணமாகி  கணவரை  பிரிந்து  தாய்  வீட்டில்  வசித்து  வந்தார்.  இந்நிலையில்,  இவர்கள் இருவருக்கும்  பெரியோர்கள்  முன்னிலையில்  கடந்த  ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால், கடந்த  ஆறு   மாதத்திற்கு  முன்பு  சத்யா  தனது  தம்பி  ஸ்ரீதரிடம்  போன்  செய்து  எனது  கணவர்  மற்றும்  குடும்பத்தினர்  ரூ.50 ஆயிரம்  பணம்  கேட்டு   கொடுமைப்படுத்துவதாக  கூறியதாக தெரிகிறது. 

கணவன் மனைவி பிரச்னை

இதனால்,  சத்யாவின்  குடும்பத்தினர்  ஓங்கப்பாடிக்கு  சென்று  ரவி குடும்பத்தினரிடம் சமாதானம் பேசியுள்ளனர்.  இதனை தொடர்ந்து, பிப்.17ம் தேதி சத்யா தனது குடும்பத்தாரிடம் என்னை மீண்டும் நம் வீட்டிற்கு அழைத்து செல்லுமாறு போனில் கூறியுள்ளார். அப்போது ரவி சத்யா குடும்பத்தாரிடம், "2 நாட்கள் கழித்து நானே கொண்டு  வந்து  விடுவதாக"  கூறியுள்ளார். இதனை நம்பி சத்யா குடும்பத்தார் மகள் வீட்டிற்கு வருவார் என்று நம்பியிருந்த நிலையில் இப்படி ஒரு இடி விழும் என்று எதிர்பார்க்கவில்லை.  இன்று காலை  ரவியின்  உறவினர்கள்  அவரின்  செல்போனில்  இருந்து  சத்யா  தம்பி  ஸ்ரீதருக்கு  போன்  செய்து  உன்  அக்கா  இறந்து  விட்டதாக  கூறியுள்ளனர்.

பெண் வீட்டார் சந்தேகம்

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த   ஸ்ரீதர் உடனடியாக தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். பின்பு  ஓங்கப்பாடிக்கு  சென்று  பார்த்தபோது  சத்யா  அறையில்  இறந்து  கிடந்தார். சத்யா எப்படி இறந்தார் என்று ரவியிடம் விசாரித்த போது,   தூக்கிட்டு  தற்கொலை  செய்து  கொண்டதாக  கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த சத்யாவின் கழுத்தில் நகத்தின் இருந்ததால், 50க்கும் மேற்பட்ட பெண் வீட்டார் 50க்கும்  மேற்பட்டோர்  திடீரென  வேப்பங்குப்பம்  காவல்நிலையத்தை   முற்றுகையிட்டனர்.  அப்போது பெண் வீட்டாரிடம் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

போலீசார் விசாரணை

மேலும், குடும்ப  பிரச்னை  காரணமாக  சத்யாவை  அவரது  கணவரும்  மற்றும்  குடும்பத்தாரும்  சேர்ந்து  அடித்து  கொலை  செய்ததாகவும்,   அவர்களை  கைது  செய்து  உரிய  நடவடிக்கை  எடுக்க  வேண்டும் என்று போலீசாரிடம் பெண் வீட்டார் தெரிவித்தனர்.  இதனையடுத்து,  சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இன்ஸ்பெக்டர்  உலகநாதன்  வழக்குப்பதிவு செய்து ரவியை  சந்தேகத்தின் பேரில் கைது  செய்து  விசாரணை  நடத்தி வருகிறார்.

VELLORE, POLICE, HUSBAND WIFE, ODUNGAPPATTI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்