ஊர்ஒலகம் காத்திருக்கு.. உறவாட வாமகனே.. எந்திரிச்சு வந்திரப்பா!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

குழந்தை சுஜித்தை மீட்கும் பணிகள் 72 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. குழந்தை மீட்கப்பட வேண்டும் என இந்தியா முழுவதும் உள்ள மக்கள் தொடர் பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் மோடி, ராகுல்காந்தி என தலைவர்கள் பலரும் சுஜித் மீட்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

 

இந்தநிலையில் சுஜித் குறித்து கவிஞர் வைரமுத்து கவிதை ஒன்றை மனமுருக எழுதி இருக்கிறார். இந்த கவிதை தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த கவிதை இதுதான்!

 

சோளக் கொல்லையில

சொல்லாமப் போனவனே

மீளவழி இல்லாம

நீளவழி போனவனே

கருக்குழியிலிருந்து

கண்தொறந்து வந்ததுபோல்

எருக்குழியிலிருந்து

எந்திரிச்சு வந்திரப்பா

ஊர்ஒலகம் காத்திருக்கு

உறவாட வாமகனே

ஒரேஒரு மன்றாட்டு

உசுரோட வாமகனே

SUJITH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்