சாத்தான்குளம் விவகாரம்: 'கொலை வழக்காக' விசாரிக்கலாம் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் விசாரணையின் பெயரில் வியாபாரிகளான தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் ஆகியோரை விசாரணையின் பெயரில் போலீஸ் அழைத்து சென்ற நிலையில் சிறையில் இருவரும் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பலர் இது தொடர்பாக நாடு முழுவதும் போலீசாருக்கு எதிரான எதிர்ப்புகள் வலுத்தன. இது தொடர்பாக சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட்டிருந்த நிலையில், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்து சிபிசிஐடி டிஎஸ்பி அணில் குமார் விசாரணை நடத்தலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கோவில்பட்டி மாஜிஸ்திரேட் மற்றும் பிரேத பரிசோதனை அடிபப்டையில் கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்