“அந்தம்மாவால ஒன்னும் அமைச்சர் ஆகல.. வரலாறு தெரியாம பேசக்கூடாது!”.. அமைச்சர் ஜெயகுமார் அதிரடி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

அதிமுகவில் தற்போது உள்ள அமைச்சர்கள் அனைவரும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்களே தவிர, சசிகலாவால் அல்ல என்று  தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில், தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.36 லட்சத்தில் கட்டப்பட்ட 2 அங்கன்வாடி மையங்களை திறந்து வைத்த அமைச்சர் டி.ஜெயக்குமார் பத்திரிகையாளர்களிடையே பேசும்போது இவ்வாறு கூறியுள்ளார்.

இதுபற்றி பேசிய அமைச்சர், “வரலாறு தேரியாமல் பேசுகிறார்கள். எங்கள் கட்சியில் இருப்பவர்களில் நான் உட்பட எல்லாரையும் ஜெயலலிதா அம்மாவின் பரிந்துரையின் தலைமையில் பதவியேற்றோம். முதல்வர் பழனிசாமி தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர்கள் கையொப்பமிட்டு தேர்வு செய்யப்பட்டவர்” என்று கூறினார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்