‘தன்பாலின ஈர்ப்பால் தாலி கட்டிக்கொண்ட சிறுமிகள்..’ அதிகாலை கோயிலில் ஏற்பட்ட பரபரப்பு..

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருக்கோவிலூரில் தன்பாலின ஈர்ப்பால் 2 சிறுமிகள் கோயிலில் தாலி கட்டிக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

விழுப்புரம் மாவட்டம் உலகளந்த பெருமாள் கோயிலில் நேற்று முன்தினம் 2 சிறுமிகள் தாலி கட்டி மாலை மாற்றிக் கொண்டுள்ளனர்.  ஒரு சிறுமி மற்றொரு சிறுமியின் கழுத்தில் தாலி கட்டியதோடு  காலில் மெட்டியும் போட்டுள்ளார். இதைப் பார்த்து அதிர்ந்த அங்கிருந்த பக்தர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

உடனே கோவிலுக்கு விரைந்த காவல்துறையினர் 2 சிறுமிகளையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.  17 வயதான இருவரும் பள்ளியில் ஒன்றாகப் படிக்கும்போது நெருங்கிப் பழகியதால் தன்பாலின ஈர்ப்பாளர்களாக மாறிவிட்டதாகவும் பள்ளி முடிந்ததும் பிரிவைத் தாங்க முடியாமல் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்ததாகவும் கூறியுள்ளனர்.

ஆங்கில பேச்சு வகுப்பிற்கு செல்வதாகக் கூறிவிட்டு இருவரும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். கழுத்தில் இருந்த தங்க செயினை முதல் நாளே விற்று தாலி, மெட்டி ஆகியற்றை வாங்கியுள்ளனர். அதிகாலையில் கோயிலில் யாரும் இருக்க மாட்டார்கள் என நினைத்து தாலி கட்டிக் கொள்ள வந்துள்ளனர். இரண்டு சிறுமிகளுக்கும் தன்பாலின ஈர்ப்பு குறித்து அறிவுரை வழங்கிய காவல்துறையினர் பெற்றோர்களை அழைத்து அவர்களை ஒப்படைத்துள்ளனர். கண்ணீருடன் அவர்களை காவல் நிலையத்திலிருந்து பெற்றோர் அழைத்துச் சென்றுள்ளனர்.

SAMEGENDER, MARRIAGE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்