இறப்பதற்கு முன் வந்த ‘வீடியோ’ கால்... தப்பிச் சென்ற ‘மர்ம’ நபர்... ‘திருமணமான’ 3 ஆண்டுகளில் இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சேலத்தில் மர்மமான முறையில் இறந்துகிடந்த இளம்பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள வலசு கிராமத்தைச் சேர்ந்தவர் கௌசிகா (23). இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த சரவணன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார். கணவருடன் திருப்பூரில் வசித்துவந்த கௌசிகாவிற்கு ஒரு வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. அழகு நிலையத்தில் வேலை செய்துவந்த கௌசிகா கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 13ஆம் தேதி தந்தை வீட்டுக்கு வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் கவுசிகா வீட்டின்முன் மர்மமான முறையில் இறந்துகிடந்துள்ளார். இதுகுறித்து அவருடைய பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கௌசிகாவின் உடலில் விஷம் அல்லது தற்கொலைக்கான அடையாளங்கள் எதுவும் இல்லை என பிரேதப் பரிசோதனை அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவருடைய உடல் சிறப்பு உடற்கூராய்விற்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வந்தால் தான் அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவரும் எனக் கூறப்பட்டுள்ளது.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கௌசிகா இறப்பதற்கு முன்பாக அவருடைய செல்ஃபோனுக்கு பல்வேறு அழைப்புகளும், ஒரு வீடியோ அழைப்பும் வந்தது தெரியவந்துள்ளது. மேலும் அவர் இறந்து கிடந்த சில மணி நேரங்களில் அப்பகுதியில் ஒரு மர்ம நபர் இருசக்கர வாகனத்தை தள்ளிக்கொண்டு சென்றதும், பின் ஸ்டார்ட் செய்து தப்பிச் சென்றதும் தெரியவந்துள்ளது. அந்த மர்ம நபருக்கும், கௌசிகாவின் மரணத்திற்கு ஏதேனும் தொடர்புள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

CRIME, MURDER, SALEM, WOMAN, BEAUTICIAN, HUSBAND

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்