என மனைவி செம போதை.. ஃபுல் மப்புல சொன்ன விஷயம்.. உச்சக்கட்ட வெறியான கணவன்.. அதிர வைக்கும் வாக்குமூலம்

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சேலம்: காடையாம்பட்டி அருகே மனைவியை கணவன் அடித்துக் கொன்ற சம்பவத்தில் காவல் துறையினர் கணவனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertising
>
Advertising

பணியாரம் வாங்கிட்டு வந்துருக்கேன்.. கொஞ்ச நேரத்துல மனைவி இறந்துவிட்டதாக சொன்ன கணவன்.. என்ன நடந்தது?

இயற்கையாக மரணமடையவில்லை:

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி பள்ளர் காலனி பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன்  இவருக்கு சரண்யா என்ற மனைவியும்  பிரித்தி , ஹரிணி  என இரண்டு பெண் குழந்தை குகன்  என்ற ஆண் குழந்தை உள்ளது.  கூலித் தொழிலாளியான இவர்கள் அதே பகுதியில் வசித்து வருகிறார்கள்.  இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் சரண்யா திடீரென இறந்து விட்டதாக ஈரோட்டில் உள்ள அவரது தம்பி நந்தகுமாருக்கு தகவல் தெரிவித்தனர்.  சம்பவ இடத்திற்கு வந்த தாய் காளியம்மாள் தனது மகள் சரண்யாவின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும்  இயற்கையாக மரணமடையவில்லை எனவும் அவரை அவரது கணவர் லட்சுமணன் அடித்து கொலை செய்து விட்டதாகவும் தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

கணவனை கைது செய்த போலீசார்:

சம்பவ இடத்திற்கு வந்த ஓமலூர் டிஎஸ்பி சங்கீதா தீவட்டிப்பட்டி இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார்  விசாரணை நடத்தினர்.  மேலும் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் தொடர்ந்து அங்கிருந்து தப்பி ஓடிய அவரது கணவர் லட்சுமணனை தேடி பிடித்து கைது செய்து விசாரணை நடத்தினர்.

கணவன் மனைவிக்கு இருந்த குடிப்பழக்கம்:

இந்த விசாரணையில் சரண்யா பள்ளியில் படிக்கும்போது லட்சுமணன் காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும் இவர் கூலி வேலைக்கு சென்று வருவதாகவும் இருவருக்குமிடையே குடிப்பழக்கம் இருந்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தான் குடிக்க வாங்கி வைத்திருந்த மதுவை மனைவி குடித்ததாலும் தான் குழந்தைகளுக்காக வாங்கிக்கொண்டு வந்த பணியாரத்தை குடிபோதையில் இருந்த மனைவி சாப்பிட்டுவிட்டு அது சரியில்லை என சண்டை போட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

எப்படி நடந்தது?

இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது இதனால் ஆத்திரமடைந்த கணவன் மனைவியை அடித்து கீழே தள்ளி கழுத்தை நெரித்து கொலை செய்ததாக தெரிய வந்துள்ளது  இதனை தொடர்ந்து தொடர்ந்து லட்சுமணனை தீவட்டிப்பட்டி காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

வீட்ட காலி பண்ணிட்டு சூட்கேசோட கிளம்புறத எங்க கண்ணால பார்த்தோம்.. விசாரணையில் வெளிவந்துள்ள திடுக்கிட வைக்கும் தகவல்கள்

SALEM, HUSBAND, WINE BOTTLE, HYSTERICAL, WIFE, சேலம், மனைவி, கணவன், குடிப்பழக்கம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்