‘என் மகள் அப்படிப்பட்டவ இல்ல’.. கல்லூரி மாணவி தற்கொலை விவகாரம்.. சிக்கிய 3 பக்க கடிதம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சேலம் பெரியார் பல்கலைக்கழக மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மாணவியின் 3 பக்க கடிதம் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் திருமலை. இவரது மகள் நிவேதா (23). இவர் சேலம் பெரியார் பல்கலை கழகத்தில் 2ம் ஆண்டு தாவரவியல் பயின்று வந்தார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் கல்லூரி விடுதியில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்த விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து தெரிவித்த மாணவி நிவேதாவின் தந்தை திருமலை, என்ன காரணத்துக்காக என் மகள் இறந்தாள் என தெரியவில்லை. என் மகள் ரொம்ப தங்கமானவள். அவள் இறந்த துயரத்தில் இருந்து எங்களால் இன்னும் மீள முடியவில்லை. என் மகள் இறப்பில் பல சந்தேகங்கள் உள்ளன. ஆனால் ஒருதலை காதலால் இறந்ததாக கூறி மேலும் எங்களை உயிரோடு சாகடிக்கிறார்கள். என் மகள் அப்படிப்பட்டவள் இல்லை என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

போலீசார் மேற்கொண்ட விசாரணையில், மாணவியின் அறையில் 3 பக்க கடிதம் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மாணவி நிவேதா படித்த தாவரவியல் பேராசிரியர் ஒருவர் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு விலங்கியல் துறை மாணவிக்கு லிப்ட்டில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தாவரவியல் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பல சந்தேகங்களை ஏற்படுத்துவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்