பணியாரம் வாங்கிட்டு வந்துருக்கேன்.. கொஞ்ச நேரத்துல மனைவி இறந்துவிட்டதாக சொன்ன கணவன்.. என்ன நடந்தது?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சேலம்: சேலம் மாவட்டத்தில் மனைவியை கொன்றுவிட்டு எதுவும் தெரியாதது போல் நடித்த கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertising
>
Advertising

அழிந்து போன சூப்பர் மலைகள்.. இமயமலையை விட நான்கு மடங்கு பெரியது.. ஆய்வாளர்கள் கூறும் வியக்க வைக்கும் தகவல்கள்

கணவன்-மனைவி சண்டை:

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த கஞ்சநாயக்கன்பட்டி பள்ளத்தெருவை சேர்ந்தவர் லட்சுமணன் (35 வயது). தறி நெசவு செய்யும் தொழிலாளியாக உள்ளார். இவருடைய மனைவி சரண்யா (26 வயது). இவர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக காதல் திருமணம் செய்துக்கொண்ட தம்பதியினர். இவர்களுக்கு பிரீத்தி (10 வயது), அருணி (8 வயது), குகன் (6 வயது) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவன் மற்றும் மனைவி இடையே சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கணவன்- மனைவி இடையே சண்டை முற்றியுள்ளது. அப்போது கணவன் வீட்டில் இருந்து அவசரம் அவசரமாக  வெளியேறியுள்ளார்.

விரைந்து வந்த பெற்றோர்:

சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்து, மனைவி இறந்துவிட்டதாக சரண்யாவின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து சரண்யா குடும்பத்தினர் விரைந்து ஓடி வந்தனர். இறந்து கிடந்த சரண்யாவின் உடலை பார்த்து கதறி துடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தீவட்டிபட்டி காவல் துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். சரண்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தீவட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தினர்.

அக்காவின் இறப்பில் சந்தேகம்:

இந்த நிலையில், சரண்யாவின் தம்பி நந்தகுமார் (24 வயது) தீவட்டிபட்டி போலீசாரிடம் ஒரு புகார் மனு அளித்தார். அதில், தன்னுடைய அக்காவின் இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும், இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதி தெரிவித்திருந்தார். சரண்யாவின் நெற்றியில் காயம் இருந்ததாக தெரிகிறது. ஆகவே கணவன் லட்சுமணனை காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். முதலில் சமாளித்துக் கொண்டிருந்த அவர், ஒருகட்டத்தில் தன்னுடைய காதல் மனைவியை அடித்துக்  கொன்றதை ஒப்புக்கொண்டார். உடனடியாக போலீசார் அவரை கைது செய்தனர்.

பணியாரம் வாங்கி வர சொன்னார்:

கணவன் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது, "கடந்த 10 வருடங்களுக்கு முன்பு சரண்யாவும், நானும் காதலித்து திருமணம் செய்தோம். திருமணத்துக்கு பிறகு அடிக்கடி எங்கள் இடையே இடையே சண்டை இருந்து வந்தது. நேற்று முன்தினம் இரவு போதையில் வீட்டுக்கு வந்தேன். அப்போது என்னுடைய மனைவி பணியாரம் வாங்கி வர சொன்னார். நான் கடைக்கு சென்று பணியாரம் வாங்கிக் கொண்டு வந்தேன். ஆனால் அந்த பணியாரம் என் மனைவிக்கு பிடிக்கவில்லை எனக் கூறி சாப்பிடாமல் இருந்தார். 

உண்மையை ஒப்புக் கொண்டேன்:

இது எங்களுக்குள் மேலும் சண்டையை உருவாக்கியது. கோவத்தில் நான் என்னுடைய மனைவியை கழுத்தை நெரித்து தரையில் அழுத்தினேன். இதில் அவர் அந்த இடத்துலயே இறந்து போனார். உடனே நான் வீட்டை விட்டு வெளியேறினேன். பின்னர் வீட்டுக்கு வந்த நான், சரண்யா இறந்து கிடக்கிறார். எப்படி இறந்தார் என தெரியவில்லை என்று எதுவுமே தெரியாதது போல் சரண்யாவின் உறவினர்களிடம் தெரிவித்தேன். முதலில் அவர்கள் நான் சொன்னதை நம்பி விட்டார்கள். ஆனால் போலீசாரின் தீவிர விசாரணையில் என்னால் உண்மையை மறைக்க முடியவில்லை. உண்மையை ஒப்புக்கொண்டேன்" என தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் கணவன் வாங்கி வைத்த மதுவை அடிக்கடி அருந்தியதால் சண்டை ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

என் உயிர் போனாலும் பரவாயில்ல.. எஜமானர் குடும்பத்துக்கு எதுவும் ஆக கூடாது.. நாய் எடுத்த ரிஸ்க்.. நெகிழ வைக்கும் சம்பவம்

SALEM, HUSBAND, WIFE, PANIYARAM, சேலம், பணியாரம், கணவன்-மனைவி சண்டை

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்