சத்குரு ஜக்கி அவர்களே இதற்கு காரணம் - மர விவசாய முறைக்கு பாராட்டு தெரிவித்த நடிகை !!...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் மர விவசாய முறை மிக ஏதுவாக அமைந்துள்ளது. அதற்கு முழுக்காரணம் ஜக்கி வாசுதேவ் தான் என ஹிந்தி நடிகை ஜூஹி சாவ்லா தெரிவித்துள்ளார்.

Advertising
>
Advertising

திடீரென தீ பிடித்து எரிந்த லாரி.. பயத்தில் குதித்த டிரைவர்.. மறுநொடியே வந்த நபர் சூப்பர் ஹீரோவாக மாறி சாகசம்

ஈரோடு மாவட்டம் கோபியில் காவேரி கூக்குரல் இயக்கத்தின் மூலம், மரம் சார்ந்த விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு ஏற்ப விவசாயிகள் சந்திப்புக் கூட்டமானது, கோபி அருகே மேவாணியில் நேற்று நடந்தது. அக்கூட்டத்தில் பங்கேற்ற ஹிந்தி நடிகை ஜூஹி சாவ்லா, விவசாயிகளிடம் மரம் சார்ந்த விவசாயத்தின் பயன்கள் பற்றியும், மேலும் அதனால் ஏற்பட்ட சுற்றுசூழல் மாற்றத்தைப் பற்றியும் கேட்டறிந்தார். பின்னர் இதுகுறித்து அவர் கூறுகையில்,  பல்வேறு சூழ்நிலையின் காரணமாக விவசாயிகள் விளைநிலன்களை விற்கும் நிலை உருவானது. ஆனால், தற்போது மரம் சார்ந்த விவசாய முறைக்கு மாறியுள்ளனர்.

 

இத்தகைய மாற்றத்திற்கு முக்கிய காரணமாக விளங்கும் சத்குரு ஜக்கி வாசுதேவிற்கும் மற்றும் ஈஷா தன்னார்வலர்களுக்கும் என் நன்றி என தெரிவித்துள்ள அவர், சத்குரு தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த பணியில் என்னால் முடிந்த உதவிகளை ஆரம்பம் முதல் செய்துவருகிறேன்.

மேலும், பாலிவுட் திரைவுலகில் உள்ள எனது நண்பர்களின் பிறந்தநாளில் மரக்கன்று நட நிதியளித்து வருகிறேன் என்றார். மேலும், அவருடைய பிறந்த நாளின் போதும், 30 ஆயிரம் மரக்கன்று நட நிதியளித்து வருவதாகவும் தெரிவித்தார்.

அடேங்கப்பா எவ்ளோ பெரிசு..! Food lovers-க்கு ‘செம’ சான்ஸ்.. இந்த தோசையை சாப்பிட்டா ‘பரிசு’ எவ்ளோ தெரியுமா..?

SADHGURU JAGGI, ACTRESS JUHI CHAWLA, TREE FARMING SYSTEM, சத்குரு ஜக்கி, ஜூஹி சாவ்லா, ஈரோடு மாவட்டம், காவேரி கூக்குரல்

மற்ற செய்திகள்