யூடியூப்பில் ஆபாச பேச்சு வழக்கு.. ரவுடி பேபி சூர்யா கூட்டாளி சிக்கா மீது போலீசார் அதிரடி ஆக்‌ஷன்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

டிக் டாக்கில் பிரபலமான ரவுடி பேபி சூர்யாவின் கூட்டாளியான சிக்காந்தர்ஷா என்கிற சிக்கா மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

Advertising
>
Advertising

திடீரென காணாமல் போன மாற்றுத்திறனாளி பெண்.. அக்கம்பக்கத்தினர் சொன்ன தகவல்.. அதிர்ச்சியில் உறைந்த கிராமம்..!

ரவுடி பேபி சூர்யா-சிக்கா

டிக் டாக்கில் வீடியோக்களை பதிவேற்றி பிரபலமானவர் ரவுடி பேபி சூர்யா. டிக் டாக் தடைக்கு பிறகு இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் வீடியோ வெளியிட்டு வந்தார். சிக்காந்தர்ஷா என்கிற சிக்கா என்பவருடன் இணைந்து பல வீடியோக்களை ரவுடி பேபி சூர்யா பதிவிட்டிருக்கிறார்.

யூடியூப் சேனல்

இருவருக்கும் தனித்தனியாக கல்யாணமாகி, குடும்பம் உள்ளது. இருவரும் ஆளுக்கொரு யூடியூப் சேனல் நடத்தி வந்தனர். பின்னர் 2 வருடம் கழித்து திடீரென இருவரும் பிரிந்துவிட்டனர். இதனை அடுத்து சூர்யாவும், சிக்காவும் ஒருவரையொருவர் ஆபசமாக தாக்கி வீடியோ போடுவதும் சில நாட்கள் கழித்து மீண்டும் இணைவதும் வாடிக்கையாக இருந்து வந்தது.

ஆபாச பேச்சு

இதனை அடுத்து யூடியூப் தளத்தில் ஆபாசமாக பதிவிட்ட காரணத்திற்காக கடந்த ஜனவரி 4-ம் தேதி இருவரையும் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். இதில் சிக்கா மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் பரிந்துரைத்தார்.

குண்டர் சட்டம்

இந்த நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், சிக்கா மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவின் படி சிக்கந்தர்ஷாவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

‘லண்டன் பொண்ணு’.. வாட்ஸ் அப்பில் வந்த பெண் குரல்.. சென்னை முதியவருக்கு நடந்த அதிர்ச்சி..!

ROWDY BABY SURYA, SIKKANDAR, ARREST, GOONDAS ACT, ரவுடி பேபி சூர்யா, சிக்கா, யூடியூப் சேனல், குண்டர் சட்டம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்