VIDEO: “அம்மா இருக்கேன் கண்ணுங்களா”.. கொட்டும் மழையில் சிக்கிய குட்டி எலிகள்!.. உயிரைப் பணயம் வைத்த தாய் எலி!... நெகிழ வைக்கும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருப்பூரில் கனமழையால் வளைக்குள் புகுந்த நிலையிலும், எலி ஒன்று தன் உயிரை பொருட்படுத்தாமல், நீருக்குள் மூழ்கிய தன் குட்டிகளை காப்பாற்றிய நிகழ்வு வைரலாகி வருகிறது. 

கடந்த சனிக்கிழமை அன்று திருப்பூரில் 1 மணி நேரத்துக்கும் மேலாக, பலத்த மழை பெய்ததில், சாலையில் பெருக்கெடுத்த வெள்ளம், ஒரு தேநீர்க் கடையில் இருந்த எலி வளைக்குள் பாய்ந்தது.

இதனால் வளைக்குள் மழை நீரில் மூழ்கிக் கொண்டிருந்த தந்து குட்டிகளை அந்த எலி, தன் உயிரை பொருட்படுத்தாமல் மூழ்கி, ஒவ்வொரு எலியாக வளைக்குள் இருந்து காப்பாற்றும் காட்சியினை மழைக்கு ஒதுங்கி ஒருவர் வீடியோவாக பதிவு செய்ததை அடுத்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

வீடியோவைப் பார்த்த பலரும், ‘இதுதான் உண்மையான அம்மா பாசம். இந்த ரிஸ்க் எடுக்க அம்மா மட்டுமே துணிவாள்’ என்றெல்லாம் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்