VIDEO : "எங்கள சாக சொல்றீங்களா?"... கொரோனாவால் உயிரிழந்த 'செவிலியரின்'... உடலை 'அடக்கம்' செய்ய விடாமல்... சண்டையிட்ட ஊர் மக்கள்... 'ராணிப்பேட்டை'யில் 'பரபரப்பு'!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த கொடிய தொற்று மூலம் நாளுக்கு நாள் சிலர் உயிரிழந்து வருகின்றனர்.

இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்த அர்ச்சனா என்பவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சிகிச்சை பலனளிக்காத நிலையில், அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதன் காரணமாக, அவரது உடலை அடக்கம் செய்ய நவல்பூர் பகுதியிலுள்ள கல்லறை தோட்டத்தில் அர்ச்சனாவின் குடும்பத்தினர் முயன்றுள்ளனர். ஆனால், கொரோனா தொற்று மூலம் செவிலியர் உயிரிழந்ததன் காரணமாக, அப்பகுதி பொது மக்கள் அவரது உடலை கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்ய விடாமல் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் தகராறில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக, கடந்த இரண்டு மணி நேரத்துக்கு மேலாக உடலை அடக்கம் செய்ய முடியாமல் செவிலியர் அர்ச்சனாவின் குடும்பத்தினர் பரிதவித்து வருகின்றனர். எதிர்ப்பு தெரிவித்து வரும் ஊர் மக்களிடம் சில அதிகாரிகள் மற்றும் போலீசார்கள் பேச்சு வார்த்தை நடத்தி வந்த நிலையில் தற்போது அவரது உடலை அடக்கம் செய்ய ஊர் மக்கள் உடன்பட்டதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து, அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. சுமார் 2 மணி நேரத்துக்கும் மேல் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

முன்னதாக, இதே போன்று சென்னையில் ஒரு மருத்துவர் கொரோனா தொற்று மூலம் உயிரிழந்த நிலையில் உடலை அடக்கம் செய்ய விடாமல் அவரது உடலை கொண்டு வந்த ஆம்புலன்ஸ் மீதும், ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மீதும் தாக்குதல் நடத்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்