மாவட்ட நிர்வாகிகளை 'ரஜினிகாந்த்' சந்திக்குறாரா...? 'சிகிச்சை முடிந்து திரும்பியுள்ள நிலையில் வெளியாகியுள்ள தகவல்...' - ரசிகர்களிடையே எகிறும் எதிர்பார்ப்பு...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ரஜினி மக்கள் மன்ற செயலாளர்களை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வகையில் புதிய கட்சி தொடங்கப் போவதாக தெரிவித்திருந்தார். அதற்காக தன்னுடைய மக்கள் மன்ற நிர்வாகிகளை தொடர்ச்சியாக சந்தித்தும் ஆலோசனை நடத்தி வந்தார்.

தேர்தல் நெருங்கி வரும் வேளையில் கொரோனா ரெண்டாவது அலை வேகமாக பரவ தொடங்கியிருந்தது. தன் உடல்நிலையை கருத்தில்கொண்டு கட்சி தொடங்கப் போவதில்லை என டிசம்பரில் அறிவித்தார். அரசியலுக்கு வருவார் என்று நம்பியிருந்த அவர்களின் ரசிகர்கள் மத்தியில் இந்த முடிவு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. பல ரசிகர்கள் ரஜினிகாந்த் வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் தேர்தல் முடிந்தபின்னர் கடந்த சில தினங்களுக்கு முன் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். அங்கு அவரது நண்பர்களுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியானது.

தற்போது சிகிச்சை முடிந்து சென்னை திரும்பியிருக்கும் ரஜினிகாந்த் நாளை (12-07-2021) ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட நிர்வாகிகளை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீண்டும் நிர்வாகிகளை ரஜினி சந்திப்பதன் காரணம் என்ன என்று அவர்கள் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்