'அசுர வேகத்தில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட பேருந்து-டிரக்! .. தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து.. 10 பேர் பலியான சோகம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ராஜஸ்தானில் பேருந்து மீது டிரக் மோதி கோர விபத்து நடந்துள்ள சம்பவத்தில் சம்பவ இடத்திலேயே 10 பேர் பலி ஆன சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ராஜஸ்தானில் பிகானர் மாவட்டத்தில் உள்ள டங்கர்கார் பகுதிக்கு அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலை 11 வழித்தடத்தில் பேருந்தும், டிரக்கும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் சம்பவ இடத்திலேயே 10 பேர் பலி ஆகினர். 

மேலும் 25 பேர் படுகாயம் அடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுபற்றி விசாரணையில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். 

ACCIDENT, RAJASTHAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்