அடுத்த 24 மணிநேரத்திற்கு ‘4 மாவட்டங்களில்’ கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் ‘முக்கிய’ தகவல்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக அடுத்த 24 மணிநேரத்திற்கு தமிழகத்தின் 4 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதில் திருப்பூர், கரூர், நாமக்கல், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழையும், தென் கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யகூடும் எனக் கூறப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். கன்னியாகுமரி கடல் பகுதிகளில் மணிக்கு 50 கிலோமீட்டர் வரை பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், அங்குள்ள மீனவர்கள் இன்றும், நாளையும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்