தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், ‘தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. வட தமிழகத்தை பொறுத்தவரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கேரளாவை ஒட்டிய கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கில் சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

பிப்ரவரி 24, 26ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் வறண்ட வானிலை நிலவும். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது’ என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்