"அந்த ஹவுஸ்மேட் கிட்ட கோபப்படாத".. அம்மா சொன்ன விஷயம்.. அடுத்த நிமிஷமே கண் கலங்கி பதில் சொன்ன ரச்சிதா

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் சமீபத்தில் ஜனனி மற்றும் தனலட்சுமி ஆகியோர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருந்தனர்.

Advertising
>
Advertising

Also Read | "வெளிய போனதும் விக்ரமனுக்கு கல்யாணமா?".. பொண்ணோட வந்துருவாருன்னு கத்திய ஷிவின்.. விக்ரமன் தாய் கொடுத்த ரியாக்ஷன்!!

இதற்கு அடுத்தபடியாக, தற்போது பிக் பாஸ் வீட்டில் Freeze டாஸ்க் நடைபெற்று வருகிறது. இந்த டாஸ்க்கில் மீதமுள்ள 9 போட்டியாளர்களின் பெற்றோர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உள்ளிட்டோர் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

முந்தைய வார டாஸ்க்கிற்கு மத்தியில் குடும்பத்தினர் குறித்து பேசியும், கடிதங்கள் எழுதியும் நிறைய போட்டியாளர்கள் கண் கலங்கி போயிருந்தனர்.

அப்படி ஒரு சூழலில், இந்த வாரம் தங்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் பிக்பாஸ் வீட்டில் வருகை தருவது அனைத்து போட்டியாளர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. மைனா நந்தினி, ஷிவின் உள்ளிட்ட பல போட்டியாளர்கள் தங்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் வருகையால் கண் கலங்கவும் செய்கின்றனர்.

அதே போல, ரச்சிதாவின் தாயார் வருவதும் பெரிய அளவில் கவனம் ஈர்த்திருந்தது. முந்தைய வாரத்தில் அம்மாவை நினைந்து கதறி கண் கலங்கி இருந்த ரச்சிதா, தாயைக் கண்டதும் கண்ணீர் விட்டார். இதன் பின்னர், மகள் ரச்சிதாவுடன் அமர்ந்து நிறைய விஷயங்களையும் பகிர்ந்து கொள்கிறார்.

"சூப்பரா விளையாடுறே. இன்னும் சூப்பரா விளையாடு. எல்லாரும் சொல்லி அனுப்புனாங்க" என்றும் ரச்சிதாவின் தாயார் கூறினார். அதே போல, ரச்சிதாவின் சகோதரரும், முதல் நாள் இங்கே வருவதற்கு முன்பே நான் நானாகவே இருக்க போவதாக நீ கூறி விட்டு வந்ததாகவும், அதே போல தற்போது வரை விளையாடி வருவது பெருமையாக இருப்பதாகவும் தெரிவிக்கிறார்.

தான் சிறப்பாக ஆடுவதை தாய் மற்றும் அண்ணன் ஆகியோர் குறிப்பிட்டதும் மனம் உருகி போன ரச்சிதா, நான் விளையாடி வருவது சந்தோசம் தானே என்றும் தாயிடம் மீண்டும் கேட்டு உறுதி செய்கிறார்.

அப்படி ஒரு சூழலில், ஷிவின் மற்றும் ரச்சிதா ஆகியோரிடையே நடந்த சிறிய சண்டை குறித்தும் கேட்கிறார் ரச்சிதாவின் தாயார். முன்னதாக, பிக்பாஸ் வீட்டில் தனது சிறந்த நண்பராக ஷிவின் இருந்து வருவதாகவும், என்னை பற்றி நன்றாக தெரிந்தும் அவர் தன்னை நாமினேட் செய்ததை ஏற்றுக் கொள்ள முடியாமல் கோபம் கொண்டதாகவும் ரச்சிதா விளக்கம் கொடுக்கிறார்.

இதன் பின்னர் பேசும் ரச்சிதாவின் தாயார், தந்தைக்கு ஷிவினை மிகவும் பிடிக்கும் என்றும், போட்டி முடிந்த பிறகு பெங்களூருக்கு அழைத்து வரும் படியும் மகளிடம் கூறுகிறார். இதனைக் கேட்டு மனம் நெகிழ்ந்து போன ரச்சிதா, இங்கு வந்த இரண்டாவது வாரம் முதலே ஷிவினிடம் மிகவும் நெருங்கி பழக தொடங்கியதாகவும் அவரிடம் சிறந்த பிணைப்பு இருப்பது போன்ற உணர்வை தருவதாகவும் ரச்சிதா சொல்கிறார்.

பிக் பாஸ் வீட்டிற்கு வந்த சமயத்திலேயே ஷிவினை கட்டியணைத்துக் கொண்ட ரச்சிதாவின் தாயார், அவரை தனது மகளாகவும் ஏற்றுக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read | வீடுகளில் விழும் விரிசல்.. மண்ணில் புதைந்து போகும் இந்திய நகரம்?.. காரணம் தெரிஞ்சு பீதியில் உறைந்த மக்கள்.. திகிலூட்டும் பின்னணி!!

BIGG BOSS, BIGG BOSS TAMIL 6, VIJAY TV, RACHITHA, RACHITHA MOTHER, SHIVIN, BIGG BOSS TAMIL FREEZE TASK

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்