'நீ லோக்கல்னா? நானும்தான்.. பசங்கள வரசொல்ட்டுமா?' .. 'நாக்கைத் துருத்தி'.. செவிலியரை மிரட்டிய டாக்டர்.. வீடியோவால் பரபரப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த தமிழ்ச்செல்வன் என்கிற மருத்துவர், பணி நேரத்தில் தன்னை எதிர்த்துப் பேசிய செவிலியரை வசைபாடியபடி பேசியுள்ள சம்பவம் வீடியோவாக வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேற்கூறிய மருத்துவமனையில்,  எம்.பி.பி.எஸ் மட்டுமே படித்த மருத்துவர்கள் மதிக்கப்படவில்லை என்றும், பணியாளர்களுக்கு அதிக நெருக்கடி தரப்படுவதாகவும் கூறப்படுவதை அடுத்து இங்கு பணிபுரியும் மருத்துவர் தமிழ்ச்செல்வன்  சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் இணை இயக்குநருக்கு புகார் அளித்துள்ளார். அந்த புகார் விசாரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் கடும் மன உளைச்சலுக்கு தமிழ்ச்செல்வன் ஆளானதாகவும், அதற்காக அவர் சிகிச்சை எடுத்து வருவதாகவும் தெரிகிறது.இந்த நிலையில்தான், நோயாளி ஒருவருடைய மருத்துவச் சீட்டில், நோயாளி குறித்த முறையான தகவல் இல்லாததால் நர்ஸிடம் கேள்வி கேட்ட மருத்துவர் தமிழ்ச்செல்வனிடம் , தான் லோக்கல் என்று நர்ஸ் ஒருவர் பேசியுள்ளதாகத் தெரிகிறது. இதனையடுத்து தமிழ்ச்செல்வனின் பேசுவதை 2 செவிலியர்கள் எதிர்கொண்டனர்.

அதன்படி, ‘கேள்வி கேட்டா என்ன ஓவரா பேசுற.., நான் டாக்டர்.. லோக்கலில் இருந்தால் நீ என்ன பெரிய ஆளா.? லோக்கல்ல இருந்து நானும் பசங்கள வரவழைக்கட்டுமா? பேஷண்ட்டோட ஹிஸ்டரிய கூட ஒழுங்கா எடுக்கத் தெரியாத நீ ஒரு நர்ஸா?’ என்று கேட்கிறார்.  அதற்கு அந்த செவிலியர்களோ,  ‘சார்.. நீங்க இருக்குற கண்டிஷன் சரியில்ல, எங்கள ஏன் வம்பிழுக்குறீங்க, மரியாதை கொடுத்து பேசுங்க’ என்கின்றனர். இந்த வீடியோவை பார்த்த பலரும் மருத்துவரின் பேச்சினை விமர்சித்துள்ளனர்.

இதுபற்றி பேசிய மருத்துவர்கள் சிலர், தமிழ்ச்செல்வனின் உளவியல் நிலையை வைத்து, அவரை வேண்டுமென்றே கோபப்படுத்தும்படி பேசி செவிலியர்கள் வீடியோ எடுத்ததாக தெரிவித்துள்ளனர்.

DOCTOR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்