‘5, 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இந்த வருஷம் கேன்சேல்!’.. ‘தமிழக அரசின் மாஸ் அறிவிப்பு’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு(2020) முதல் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு முன்னமே அறிவித்திருந்த நிலையில், இந்த ஆண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

முதல் 3 ஆண்டுகளுக்கு தேர்ச்சி நிறுத்தி வைக்கப்படமாட்டாது என்றும் மாணவர்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் பள்ளிக்கல்வி ஆணையர் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் இதுபற்றி விவாதிக்கப்பட்டது.

இந்நிலையில்தான் 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், பழைய தேர்வு நடைமுறையே தொடரும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்